கவிஞர் ரவிகிருஷ்ணாவின்
ஹைக்கூ கவிதைகள்########################
நெற்றியில் வியர்வை
முத்து முத்தாய் இருக்கிறது
பற்களின் வரிசை
_____________________
நீரதன் ஓட்டம்
நீண்ட அரவமாய் தெரிகிறது
சுற்றிய கயிறு
_____________________
மீன்பிடித் துறையில்
கூடிய சனங்களின் கூட்டம்
சத்தியாக்கிரகம்
_____________________
பானையில் சோறு
சரியாக பதமாய் இருக்கிறது
விளைகின்ற நிலம்
_____________________
குருவியின் கூடு
தொங்கிய நிலையில் இருக்கிறது
மரத்தினில் வெளவால்
_____________________
நீண்ட பயணம்
என்றும் நிலையான துன்பம்
சந்தேகப் புத்தி
_____________________
பசும்பாலின் செழுமை
அழகிய குழந்தையில் தெரிகிறது
குறும்பதன் வண்ணம்
_____________________
பிள்ளைகள் இன்பம்
எப்போதும் பெற்றோரின் கனவு
நீடித்த வாழ்வு
_____________________
பத்தும் பறப்பது
பசி வந்தால் தெரியும்
ஏழைகள் வாழ்வு
_____________________
அந்நியர் ஆட்சி
என்றும் உணர்வதன் மிகுதி
தகாத தண்டனை
_____________________
மேற்பார்வை செய்தல்
சிலருக்கு வேண்டா வெறுப்பு
களப் பரிசோதனை
_____________________
சொல்வது இலகு
அவரே செய்வது கடினம்
களத்தில் வேலை
_____________________
பெறுபேறு மட்டும்
அரச பாடசாலை அடைவு
பலரது எண்ணம்
_____________________
பிள்ளையின் வாழ்வு
நினைக்கொணாத் துயரம்
ஒருவழிப் பாதை
_____________________
இயந்திரப் படகு
நீரில் கவிழ்ந்து கிடக்கிறது
இன்றைய போக்குவரத்து
_____________________
ஒன்றினில் வேட்கை
நிலையான வெற்றியின் சின்னம்
பயிற்சியும் முயற்சியும்
_____________________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
ஈழம்
Comments
Post a Comment