கிரான்குளம் மாரிக்காக ஒரு காவியம்
கிரான்குளம் மாரிக்காக ஒரு காவியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தந்தநத நாதநத நாதநத நானா தனநாத நாதந்த நாதந்த நானா -2 தடவை கிரான்குளத்தூரிலே நிலைகொண்டு நின்று கிருபதனை தந்திடும் மாரியென ஆனாய் உன்பதம் நாடிவரும் அடியவர் கூடியே உனதருளை பாடியே உலகோர்க்கு சொன்னோம் தந்தநத ................................................. அன்புடனே வந்தோமே அம்மா உன் பதி சேர அருளொளியை பொழிந்துமே மாரியே காப்பாய் பொன்னடி சேர்ந்திட வாழ்வுமே தழைக்கும் பொலிவுடன் நிற்கும் உன் திருக்கோயில் மலரும் தந்தநத ................................................. தாயென நினைத்துமே தாழ்ந்திடும் உள்ளம் தாங்கிடும் சக்தி தரும் மாரியே தாயே எண்ணங்கள் தூய்மை பெற உனை நாடுமம்மா என் உயிர் நாயகி நீயானாயம்மா தந்தநத ................................................. இன்னல்கள் நீக்கிடும் ஈஸ்வரியும் நீயே இறை அருள் தருவாயே மாரியேயம்மா கண்ணீர் துடைத்திடும் கருணைமிகு தாயே காக்கும் கதியான நீ மாரியம்மா தந்தநத ................................................. மங்களம் தருமே உன் திருநாமமம...