Posts

Showing posts from October, 2024

அன்பு

 அன்பு #####  நேற்றும் இன்றும் நாளையும் அன்புதான் ஒன்றாய் அரவணைத்துக் கதை பேசும்  தாயவள் அன்பு சேயுடன் கதை பேசும் தந்தையின் அன்பு தாரகை வரமாகும்  பிள்ளையின் அன்பு பிடிவாத குணமாகும் பெரியோரின் பண்போ பேரின்ப வரமாகும்  கேட்டதைக் கொடுத்தல் அன்பாய் மலருமோ கொட்டிய வார்த்தைகள் விட்டெறிந்தோடுமோ  விட்டுக் கொடுத்தல் விண்ணையும் தாண்டும் தட்டிக் கொடுத்தல் தரணியைக் காக்கும்  மூலை முடுக்கெலாம்  முடங்கி கிடப்பேனும் பாதை வழிதொறும் பறந்தே கழிப்பினும்  அன்பின் துணையதே அரவணைப்பாகிடும் அல்லல் விட்டொரு அருளும் தந்திடும்  முடிவுடன் கூடி நாம் அன்பால் தேற்றுவோம் முற்றுகையிட்டொரு முரசமும் கொட்டுவோம்  அன்பை அன்பால் அன்பு செய்யும் அன்பே அன்பு  ________ கவிஞர் ரவிகிருஷ்ணா மட்/கிரான்குளம்

தீபாவளி வாழ்த்துக்கள்

 தீபாவளி வாழ்த்துக்கள் ****************************  தீபத்தால் ஒளிபரப்பி வரிசையிடும் தீபாவளியே இம்முறையேனும்  இணங்கியொரு தீர்வாகுமா  இலங்கையின் இன்னலுக்கு  தித்திப்பாய் வாழ்விலே தீர்வொன்று கிடைக்கும் திறனுயர்ந்து என்றென்றும் உயரட்டும் புவியோர்கள்  தீந்தமிழ் கானம் பாடி கனிவுகள் மலரட்டும் எண்ணத்தின் அலைகளவை திசையெல்லாம் மிளிரட்டும்  தீபாவளித் தினமோங்கி தீண்டாமை விலகட்டும் தீராத ஆசை விட்டு திசைகலெலாம் மலரட்டும் திரவியங்கள் இயக்குவித்து மனவலிகள் தீரட்டும்  தீவு ஒன்றாய் இணையவிட்டு தீர்க்கமுற்று ஓங்கட்டும் தீபமாய் உயரமேறி  திண்மையுடன் மிளிரட்டும்  தித்திக்கும் தேன்கலந்து  இனிய மொழி பேசட்டும்  திகட்டாத தெள்ளமுதாய் திகைப்பிழந்து வாழட்டும்  தீபாவளியே வருக தீபத்தாலொளி தருக தித்திப்பாய் சுடர் விடுக தீரா உறவு பெறுக அனைத்து உறவுகளுக்கும் தித்திக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்  ______________ கவிஞர் ரவிகிருஷ்ணா  மட்/கிரான் குளம் ஈழம்

கவிஞர் ரவிகிருஷ்ணாவின்

Image

கலைஞர் ஒன்று கூடல்

  கலைஞர் ஒன்று கூடல் *************************** கலைஞர்களின் ஒன்றுகூடல் இருக்குது மச்சான் கட்டாயம் நான் போகவேணும் சொல்லுங்கள் மச்சான் தாழங்குடா பாடசாலை மரத்தடியின் நிழலில் மங்கலமாய் ஒன்றுகூடல் மண்கமழ்ந்தொலிக்கும் பிரதேச செயலாளரும் வர்ராங்களாம் அங்கே வந்து பலவும் பேசிடவே விளைகிறோமே இங்கே கதிரவன் கலைக்கழக ஒழுங்கமைப்பில் கூடி பல அனுபவத்தின் பகிர்வுகளை விருந்தளிக்கப் போறோம் மண்முனைப் பற்றதனின் கலைஞரெலாம் அங்கே பிரதேச பெருமை பேசி கலைவளர்ப்போம் இங்கே கலாசார பேரவையின் பெருமையிலே இன்று மனமகிழ்ந்து கொள்கிறேனே மனம் நிறைவாயின்று ------------------ கவிஞர் ரவிகிருஷ்ணா மட்/கிரான்குளம்

சிட்டுக்குருவி

 சிட்டுக்குருவி எழில் மிகுந்த சிற்பங்களால் தங்கி வாழும் கூடுதன்னை எண்ணங்களால் வண்ணமாக்கி எல்லையற்று நிற்கின்றீர் சுந்தரத்தில் தேன்கலந்து சுதையினால் வடிவமைத்து சுடரென வெளிக்கிறது சிகரமெனும் சின்னமாகி உங்களின் கைவரிசை விமானத்தை விந்தை செய்து வசந்த மடம் வண்ணமாகி முன்னெளில் மண்டபமும் கதைபேசிக் களிக்கின்றன அர்த்தமுள்ள வார்த்தை கொண்டு உம் பணியை கலைப்பணியாய் இன்பமுறச் செய்கிறீரே நிகரேது உன் படைப்பதற்கு நிழலாகி பயணிக்கும் எங்கள் வாழ்வுயாவும் சிலைவடிவுச் சின்னமெலாம் கலைப் பணியை வாழ்த்துகிறோம் கருணையுடன் மெச்சுகிறோம் நிறைவுமிகு செல்வமாகி நினைவெல்லாம் வடிவமாகி உருவமதன் ரூபமாகி இனி வரும் காலமெல்லாம் இனிய வாழ்வு பேசட்டும் _________ கவிஞர் ரவிகிருஷ்ணா மட்/கிரான்குளம்

கவிஞர் ரவிகிருஷ்ணாவின் ஹைக்கூ

  கவிஞர் ரவிகிருஷ்ணாவின் ஹைக்கூ ######## நெற்றியில் வியர்வை முத்துப்போல் இருக்கிறது பற்களின் வரிசை _____________________ நீரதன் ஓட்டம் அரவமாய் தெரிகிறது சுற்றிய கயிறு _____________________ மீன்பிடித் துறையில் சனங்களின் கூட்டம் சத்தியாக்கிரகம் _____________________ பானையில் சோறு பதமாய் இருக்கிறது விளைகின்ற நிலம் _____________________ குருவியின் கூடு தொங்கிக் கொண்டிருக்கிறது மரத்தினில் வெளவால் _____________________ நீண்ட பயணம் நிலையான துன்பம் சந்தேகப் புத்தி _____________________ பசும்பாலின் செழுமை குழந்தையில் தெரிகிறது குறும்பதன் வண்ணம் _____________________ பிள்ளைகள் இன்பம் பெற்றோரின் கனவு நீடித்த வாழ்வு _____________________ பத்தும் பறப்பது பசி வந்தால் தெரியும் ஏழைகள் வாழ்வு _____________________ அந்நியர் ஆட்சி உணர்வதன் மிகுதி தகாத தண்டனை _____________________ மேற்பார்வை செய்தல் வேண்டா வெறுப்பு களப் பரிசோதனை _____________________ சொல்வது இலகு செய்வது கடினம் களத்தில் வேலை _____________________ பெறுபேறு மட்டும் பாடசாலை அடைவு பலரது...