Posts

Showing posts from 2024

எங்கள் வீட்டின் இசை

  எங்கள் வீட்டின் இசை ×××××××××××××××××××× எங்கள் வீடு தன்னிலே தட்டுமுட்டு யாவுமே இசையைப் பேசிச் செல்லுமே இனிய கணங்கள் தோறுமே கதவு பாடும் கானமும் துலா சொல்லும் வீணையும் கருவி இலா கானமாய் நித்த நித்தம் வீட்டிலே நிலைத்த கதைகள் சொல்லுமே குளிப்பு நேர நீரிலே சலசலத்த ஓசையும் குழந்தை மழலைப் பாடலும் கூவும் குயிலினோசையும் கரையும் காக வித்தையும் கரைந்திடாத தத்தையும் இசையின் வடிவமாகுமே ஆடுகின்ற மரத்திலே அழகு வண்ணம் தோன்றியே இசைக்கும் தெனாறல் கீதமே இனிய பாடலாகுமே கவிஞர் ரவிகிருஷ்ணா

புத்தாண்டு

 புத்தாண்டு  ************  புத்தாண்டு என்கிறார் புதிய கதை பேசுறார் மத்தாப்பு கையெடுத்து  மதிமயங்கி நிற்கிறார் எக்காலம் எதுவென்று  ஏளனமாய் பேசுறார் முடிந்த கதை முடிந்ததென்று  முசுப்பாத்தி பண்ணுறார் பக்கமெல்லாம் படர்ந்து வந்து  பழைய கதை முடிக்கிறார்  சிட்டெனவே சிறகடித்து  சில நிமிடம் பறக்கிறார் கண்டதெல்லாம் கையெடுத்து  கருணை மனு கேட்கிறார் சடுதியிலே சறுக்கி நின்று  சண்டைப் பயிற்சி செய்கிறார் தத்தித்தாவி தவழ்ந்து வந்து  தடயம் ஒன்று வைக்கிறார் இத்தனையும் விட்டெறிந்து இளைப்பாறுவம் என்கிறார் மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு  முடிந்த கதை பேசுறார்  அத்தனையும் சொர்க்கம் என்று  அப்படியே நிற்கிறார் ஆசா பாசம் காட்டிக்கொண்டு  ஆலாபனை பண்ணுகிறார் இலக்கியங்கள் பேசுகின்ற  இனிய கதை சொல்லுகிறார் ஈடிணையாய் கதைகள் பேசி  ஈர இதயம் தருகிறார்  உள்ளதெல்லாம் உருவம் என்று  உரக்கச் சொல்லி நிற்கிறார் ஊரும் உலகும் பேசுகின்ற  ஊக வார்த்தை சொல்லுறார் எண்ணமெல்லாம் கதை எழுதி எப்பொழுதும் மகிழ்கிறார் ஏணிய அதன்படியிலே  ...
 உறவுகளோடு  வைத்திருக்க வேண்டிய  அன்பையும் பண்பையும் மனிதன் கைபேசியோடும் தொலைக்காட்சியோடும் இன்று பரிமாறிக்கொள்கிறான் நாளை எப்படியோ?????? கவிஞர் ரவிகிருஷ்ணா
 வீட்டுச் சுவரில் மீண்டும் மீண்டும் ஒட்டடை தோன்றி துடைப்பத்தின் வலியை  எழுதிச் செல்கிறது கவிஞர் ரவிகிருஷ்ணா
 உயிருடன்  இருப்போரை எண்ணி மயானம் தனக்குள் நகைத்துக்   கொள்கிறது
 மறைந்த தமிழர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் ****************************************  ஈழத் தமிழரின்பால் இணையிலா அன்பு கொண்டு அவர்களின் புன்னகைக்காய் காத்திருந்து தன் பிறந்தநாளையே  கொண்டாட மறுத்து  தள்ளிவைத்த தலைமகன்  ஏழை எளியவர்பால் எண்ணிலடங்கா அன்பினில் விளைந்தவன்  பலரது வாழ்வு பக்கமெல்லாம் ஒளிபெருக பரபரப்பில்லா பயனுறுதி கொடுத்த பகலவன் இந்த புரட்சியின் நாயகன்  நடிப்பில் மட்டுமல்ல உண்மையின் முகமும் நல் மனிதனாக செயலும் கதையும்  பாரத மாதா அழுத்து போல் ஊடகங்கள் விட்ட கண்ணீரும் நடிகை நடிகையர் விழிகள் சிந்திய துளிகளும்  கேப்டன் கேப்டனென்ற வாசகமும் மனங்களில் பள்ளிகொண்டுவிட்டன  காசு பணம் துட்டு எலாம் வாழுவரை கதை பேசும் அன்பு மட்டுமே நிலைகொண்டு வாழும் நித்திய பூமியென பல அரசியல் மேடைகளை அலங்கரித்த மனச் சுத்திகொண்ட பேச்சு மறுக்கமுடியாத படி மனங்களில் உறைகிறது  தன்னலமற்ற தலைவர் தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட தமிழின் காவலர் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்.  சொல்லொன்று செயலொன்று என்றில்லாத செயல் வீரர் சொன்ன சொல் வழி நின்...
 கைவிரல் இடுக்கில் பேனா உலகத்தை  அடக்கி விடுகிறது கவிஞர் ரவிகிருஷ்ணா
 அன்றைய தலைமுறையின்  கற்றலை அனுபவித்த  குப்பி விளக்குகள்  இன்று மின் விளக்குகளிலும்  கற்க மறுக்கும்  சந்ததியை பார்த்து  அதிசயித்துக் கிடக்கிறது கவிஞர் ரவிகிருஷ்ணா

அன்பு

 அன்பு #####  நேற்றும் இன்றும் நாளையும் அன்புதான் ஒன்றாய் அரவணைத்துக் கதை பேசி தாயவள் அன்பு சேயுடன் கதை பேசி தந்தையின் அன்பு தாரகை வரமாகி  பிள்ளையின் அன்பு பிடிவாத குணமாகி பெரியோரின் பண்போ பேரின்ப வரமாகி கேட்டதைக் கொடுத்தால் அன்பாய் மலருமோ கொட்டிய வார்த்தைகள் விட்டெறிந்தோடுமோ  விட்டுக் கொடுத்தல் விண்ணையும் தாண்டும் தட்டிக் கொடுத்தல் தரணியைக் காக்கும் மூலை முடுக்கெலாம்  முடங்கி கிடப்பினும் பாதை வழிதொறும் பறந்தே கழிப்பினும்  அன்பின் துணையதே அரவணைப்பதுவாகி அல்லல் விட்டொரு அருளும் தந்தேகி முடிவுடன் கூடி நாம் அன்பால் தேற்றுவோம் முற்றுகையிட்டொரு முரசமும் கொட்டுவோம்  அன்பை அன்பால் அன்பு செய்யும் அன்பே அன்பு  ________ கவிஞர் ரவிகிருஷ்ணா மட்/கிரான்குளம்

கலைஞன்

 கலைஞன் ************  தன்னாவி விட்டு தன் சமூகத்திற்காய் தரமிகுந்த தன்மொழியால் ஆர்ப்பரிக்கும் அர்த்தமவை தருபவனாம் சீர் மிகுந்த கலைஞனவன்  இரவு பகல் மாறினாலும் இடி விழுந்து ஓடினாலும் இலக்கியத்தில் பேசுகிறான் அரங்கதிர ஆட்டம் கண்டு அங்கலாய்த்து நிற்கின்றான்  சமூகத்தின் விடியலுக்கு சாமான்ய விடை கொடுத்து உயர்த்தி விட கலை என்ற சோதியுள் புகுந்து இரண்டறக் கலப்பது தான் சொற்பனம் என்றும் அவனுக்கு  இடைத்தடங்கல் உடைத்தெறிந்து காற்றாக இசையாக மெல்லினத் தென்றலாக தொடர்கிறது பயணம் முடிவுறாத் தண்டவாளங்களில் ஏறிய தொடர் பயணம் அவனுக்கு  இடைவெளி இல்லா வாழ்நாள் உணர்வு மிகுதியால் பரந்து கிடக்கிறது அவனது மன வானம்  எப்போதும் ஏதோ ஒன்றை செய்ய மனம் இசைகிறது செயல் விரிந்து தரம் திரிகிறது  வாழ்நாள் பரீட்சயத்தில் வாழ்வின் சங்க நாதம் ஒலித்திருக்க சூழலுடன் இடைத் தாக்கமாகி இடைவிடா தடயங்களில் என்றுமே முயலும் ஒருவனாக  மீண்டும் தொடரும் மிடுக்கினுள் புகுந்து காலத்தின் ஓட்டத்தில் கலையினால் அவனுமோர் புது உலகு புனைந்திட புதுவழி தேடுகிறான்  நான்கு என்பது கோர்த்து மாமிச் சட்டை பூட்டி...

பாரதி

 பாரதி *******  பாரதியென்றொரு தாமரை பூத்தது சாதியும் பேதமும் போய்விடவே தமிழ் வேதம் முழங்கியே விண்ணுமதிரவே பாடல் புனைந்துமளித்தவரே  இயற்கையெழிலினைப் பாடியும் நாடியும் இயற்றமிழாகவே தந்தவனே நல்ல பக்திப் பரவசம்  மேவியருளியே பாங்காக பாடலும் தந்தவனே  முத்தமிழ் மண்ணில் முழங்கி இசைத்துமே அவன் புகழைச் சொல்லிப் பாடுகிறோம் அங்கமெல்லாம் தமிழ்  உயிருணர்வாய் அல்லோ அவன்கவி பாடவும் ஏறி நிற்கும்  சுதந்திர கீதத்தை சுந்தரமாகவே சுவை படவெமக்குத் தந்தவனே நல்ல நித்திலம் நாங்களும் வாழும் மட்டும் சாதி பேதம் மறந்துதான் வாழ்ந்திடுவோம்  பெண்ணடிமைத்தனம் போக்கியவன் இங்கு பெண்ணின் மகிமையுர்த்தியவன்  பல்வகையாகவே பாடல் தந்து நம்மை பன்மைப்படுத்தி மகிழ்வித்தவன்  ____________ கவிஞர் ரவிகிருஷ்ணா  மட்/கிரான் குளம் ஈழம்

மகள் எழுதிய கவிதை

 மகள் எழுதிய கவிதை ##################  அன்பு மகள் நெஞ்சினுக்கு கவியொன்று நானெழுத அதிகாலை நேரத்திலே  ஆதரவாய் எழுந்திருந்தேன்  பின்னால் ஏதோ  குறும்பொலியின் பரிசம் வந்தாள் இருந்தாள் சிரித்தாள் ஏதேதோ கதைகள் பேசி அணைத்தாள்  என் தலைகள் அவள் கையிடுக்கில் நான் என்னையே மறந்தேன் சில கணப்பொழுதுகள் என் எண்ணமெல்லாம் கலைத்தாள்  நான் எழுத நினைத்தேன் அவளைப்பற்றி அவள் தன்னையே எழுதிவிட்டாள் அந்த அதிகாலைப் பொழுதினிலே அதைவிட கவிதையுமுண்டோ இவ்வையகத்தே  ________ கவிஞர் ரவிகிருஷ்ணா

அழகுக் கோலம்

 அழகுக் கோலம் #############  வீட்டு முற்றம் தன்னிலே விட்டமொன்று கீறியே அழகுக் கோலம் தன்னையே பூவையவள் போடுவாள் பூவின் வண்ணம் காட்சியே  காலை நேரம் ஆனதும் கண்ணியமாய் எழுந்துமே கனத்த கோலம் போடுவாள் அழகுமிங்க தங்கையே  மாவின் வண்ணம் கலந்துமே மாயவித்தை செய்துமே பூச்சி எறும்பு உன்றிட படர்ந்த கோலம் போடுவாள் பூத்த கன்னித் தேவதை  தானியங்கள் கூடியே தரையைக் கொஞ்சி நித்தமே மின்னல் கோலமாகிடும் மீட்டும் பாவை கையாலே  வண்ண வண்ண நிறத்திலே வடிவழகாய் இருக்கவே கண்ட காட்சி கோலமாய் கனவைக் கலைய வைக்குமே __________ கவிஞர் ரவிகிருஷ்ணா மட்/கிரான்குளம்

கூடுகட்டும் பறவை

 கூடுகட்டும் பறவை ***********************  காலையில் எழுந்து கனதிகள் விடுத்து சிறியபல துரும்பெலாம் வகுத்து பிரம்பு கோர்க்கும் கலைஞனாகி நிற்கிறது பறவையொன்று  சிற்பியும் அசந்து போய் ஆச்சரியம் பொங்கியோங்க அகலப்பட்டுக்கிடக்கிறது உழைக்கும் கணங்களெல்லாம்  வித்தை காட்டும் வித்தகனா விதியுறங்கும் புத்தகனா காற்றில் அசைந்தாடிக்களிக்கிறது  வானத்து மேடையிலே வழிபல தேடித்தேடி பிடித்த இடமொன்று கண்டெடுத்து  அமைத்துக் கொள்ளுதலோ தனக்கான இருப்பிடத்தை  தூக்கணாங் குருவிக்கூடு தூங்கித் தூங்கிநிதம் குதுகலமாய் காற்றின் பரிசங்களை தனக்கான பரிசதாக்கி பரிவிடை நெஞ்சினுக்கு நல்வழி சொல்லிச் செல்லும்  மரக்கொப்பு தன்னினுள்ளே மரக்கிளைகள் அடுக்குப் பண்ணி மனதாரப் பள்ளிகொள்ளும் மற்றொரு பறவை  இத்தனைக்கும் மத்தியில்  எந்தன் கண்கள் காண்பதோ  இன்பம் மிகுந்த காட்சியோ கோடி கோடி ____________ கவிஞர் ரவிகிருஷ்ணா

முளைத்த விதை

 முளைத்த விதை ××××××××××××××××  நிலத்திலே நிலைகொண்டு முளைகொண்ட விதையொன்று பசுமையாய் நிறைந்திருந்து நாள்தோறும் தளிர்விட்டு இலைகள் பல பரப்பிநிற்கும்  தடம் பதித்த தருவாகி நல்லுறு நிழல் தந்து மக்கள் மனம் நிறைவுபெற மனதாரப் களிப்புமிகு மரமெனவே விரைவுபெறும்  மறுகணப் பொழுதுகளில் மாறிலா மலர்வுடனே நீள்நெடு வளர்ச்சிகண்டு நிதானமுறு விருட்சமென நிலைத்தொரு உறுதிபெறும்  இலக்கணம் கண்டுகூடி கூடுகட்டும் பறவையது குவலயத்தே துவண்டெழுந்து குடியொன்று காத்துவிட தன்வீட்டைத் தானமைக்கும்  வானுயர்ந்த விருட்சமதோ அடுத்தடுத்து தன்பரப்பில் பிஞ்செனப் பிடித்தெழுந்து காயாகிக் கனியெனவே அமுதமென விரிந்தெழும்பும்  இன்னிசைக் பொழுதுகளில்  பறவைகள் ஆரவாரம் அழகென விரிந்தெழுந்து தம்பசி போக்கிவிட தாராளம் உறுதி கொள்ளும்  அத்தகு தருணமென அமைத்ததுவோ வேறேது விதைதந்த பாடமலோ விழுதாக நிண்டமுற்று நீதானமென நிறுத்தியதே __________ கவிஞர் ரவிகிருஷ்ணா

கிரான்குளத்தூர் நன்னாரித் தேநீர்க் கடையும்

 கிரான்குளத்தூர் நன்னாரித் தேநீர்க் கடையும்  நினைவழியா காலமும் ###################  எங்களூரிலோர் நன்னாரி தேநீர்க்கடை பிரதான சாலையோரம்/ என்றென்றும் காலையில் விழிக்கும் மாலையில் உறங்கும்/ நன்னாரிச் சுவையின்  அருமையும் கூடி சூடது பிடித்திடும்/ இளமையும் முதுமையும் நட்புடன் கூடியே நாலதும் பேசும்/  பக்குவம் பள்ளியாய் நெஞ்சினில் உதித்தவை நேரமும் பார்க்குமோ/ வாகன சாலையில் மிஞ்சிய கதைகளோ  மீதமாய் நீட்டியும்/ பேசிய கதைகளில் மனதிலே நின்மதி நிறைவதாய் சேருமே/ நித்தமும் மொத்தமாய் கையதில் ஏந்திய  குவளையும் மறக்குமோ/  தேநீர் மட்டுமா நன்னாரி இட்டதை நயமுடன் பகிருவார்/ இன்றும் என்றும் நாவினில் ஒட்டியே கதையது பேசுமே/ சுவையதன் அருமையோ நாளெல்லாம் முடியினும் நற்கதி செய்யுமே/ இன்றும் என்றும் மறந்திடக் கூடுமோ தேநீரில் மகிமையே நினைவிலோர் சந்தமாய்/ ________________ கவிஞர் ரவிகிருஷ்ணா  மட்/கிரான்குளம்
 என்னோடு குந்தியிருக்கிறது ஒரு பறவை அதற்கு பாசமும் பரிவும் தெரியும் பேசமட்டும் தெரியவில்லை __________ கவிஞர் ரவகிருஷ்ணா
 எப்போ வருவீர்கள்  தொலைபேசிகளைத் தொலைத்துவிட்டு எங்கள் முகம் பார்ப்பதற்கு புழுதி படிந்த புத்தகங்கள்  துடைப்பத்திடம் விண்ணப்பம் __________ கவிஞர் ரவகிருஷ்ணா
 தேங்கிக் கிடக்கும் நீருக்குத் தெரியும்  கிராமத்தின் வறுமையும் அரசியலுக்குள் அரசியலும் கவிஞர் ரவிகிருஷ்ணா

பசி

 பசி ###  புழுதிக் கால்களுடன் விளையாடும் சிறுபிள்ளை அடுப்பெரியும் நினைப்பதனில் பசியை விட்டுச் செல்கிறது வாசலின் படிகளிலே அடிக்கடி எட்டியெட்டிப் பார்த்தபடி _________ கவிஞர் ரவிகிருஷ்ணா

அப்பா என்பது அதிசயமான புத்தகம்

 அப்பா என்பது அதிசயமான புத்தகம் ##############################  அப்பா என்பது  அதிசயமான புத்தகம்  ஆசைகள் தீர்த்திடும்  அருமையின் பெட்டகம்  இன்பமே இலக்களிக்கும்  இனிமையின் சட்டகம்  ஈதலின் நாயகன்  இணையில்லா தலைமகன்  எங்கள் குடும்பத்தின்  தலை மகன்  உண்மையின் உயிராகி  உலவிடும் நாயகர்  உதிரமோ தந்தெமை  உலகிலே விட்டவர்  ஊரிலே அவர் பெயர்  பிள்ளையால் நிலைக்கனும்  என்றே என்றென்றும்  உரைத்திடும் போதகர்  எங்களின் எண்ணமோ  எல்லாமாய் நலம் பெற  ஏணியாய் உயர்ந்துமே  என்றென்றும் நிற்கின்ற  எண்ணமாய் உயர்ந்தவர்  இவர் எல்லையில்லா காவலர்  ஏக்கங்கள் தீர்த்திடும்  எங்களின் பேறவர்  உயர்வினில் மகிழ்ந்துமே  பேரெழில் கொள்பவர்  எத்தனை எத்தனை  ஜென்மங்கள் எடுப்பினும்  எங்களால் என்னதான்  செய்யணும் தியாகமான தீபமே  ஐயையோ என்று நாம்  அலறிய போதிலும்  அன்பாய் அவர் வந்தே  அரவணைத்து நிற்பவர்  எங்கள் தந்தையாம் திருமகன்  இவர் குணத்திலே உ...

அணை கடந்த அரசியல் வெள்ளம்

 அணை கடந்த அரசியல் வெள்ளம் ############################  அன்றொரு நாள் காலையிலே ஆரவாரமாய் நான் எழும்பி  அவசரமாய் புறப்பட்டேன்  நீண்ட பயணம் செல்லவென்று  சோ என்ற மழை  சோபனமாய் பெய்யத் தொடங்கியது எங்கு பார்த்தாலும்  வெள்ளக் காடாகி தொப்பட்டம் தொப்பட்டம்  வானமும் பூமியும் நோக்கியபடி  என் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்கின்றது  இடியும் முழக்கமும் முகாரி பாட ஆரம்பித்திருந்தன இருப்பினும்  அடிக்கடி சூரியன்  ஓரக் கண்களை  எங்கள் பக்கம் நீட்டி நீட்டி  செல்லுகிறான் வில்வளைவாய்  வானவில்லும் அன்நேரம்  அரும் பெரும் காட்சியாகிறது  சில கணங்கள்  பொந்தில் இருந்து  வெளியேறும் எறும்புக் கூட்டங்களாய் மனிதப் பிரளயங்கள்  அங்குமிங்கும் பிரகாசிக்க ஆரம்பித்தது  பயணங்கள் தடைப்பட்டு  பாதைகள் அடைபட்டு வீடுகள் தோறும்  வெள்ளம் தன்னை  விளம்பரம் செய்து கொள்கிறது  அதி குளிர்தன்னில் அவதியுற்று இருப்பதற்கு கூட இடமில்லாது தவிக்கின்ற மனித நேயங்கள் சில வரிசையிட்டு தஞ்சமாகிறது  மாடி வீட்டு பாடியதனில்...

தலை இருக்க வாலாடும்

  தலை இருக்க வாலாடும் ××××××××××××××××××××××× தலைவர் என்ற பெயரெடுத்து தன்னிகராய் இருக்கையிலே மற்றொன்று உள் நுழைந்து மருவினைகள் செய்து வைக்கும் உச்சி மீது வானமேறி உரையெழுதும் பொழுதுமாகி விண்ணை முட்டும் கதைகள் பேசி விதைத்து வைக்கும் மொழிபலவும் சிங்கமான வார்த்தை கொண்டு சிரத்தின் மீதில் ஏறி நின்று சீர்குலைந்த வார்த்தை பேசி சிறுமைத்தனம் இட்டு வைக்கும் முந்தி நின்று மூக்கறுக்கும் முறுகலான செயலும் பண்ணும் மூத்த வாக்கு விட்டெறிந்து முப்பது நாள் காவலாகும் சுற்று முற்றுடும் பார்க்க மாட்டார் சுடர் விடவே சூழ்ந்திருப்பார் ஆன பொருள் அறிவியல்லாம் அள்ளியள்ளி இறைத்து வைப்பார் மின்னுகின்ற தாரகையாய் மினுமினுப்பாய் வந்து போவார் மிச்ச சொச்சம் பார்க்க மாட்டார் மடுக்கான வேலை செய்வார் ஐந்து விரல் கரமதனால் அவதியுற்ற நடத்தைக் கோலம் அல்லலுற்று தேறியபின் அப்போதேதான் பின்னிழுப்பார் இவ்வரிய செயலில் மட்டும் இணக்கமாகி சேவை செய்ய எத்தனங்கள் பார்த்திருப்பார் என்றும் இல்லா சேவகர் தான் __________ கவிஞர் ரவிகிருஷ்ணா மட்/கிரான்குளம்

சோழர் காலம்

 சோழர் காலம் சுருக்க குறிப்புக்கள் கி.பி 9 – 14 நூற்றாண்டுவரையானக் காலப்பகுதி 400 ஆண்டுகால ஆட்சி இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம், காவியக்காலம் 1. சோழர்கால இலக்கியங்கள் சோழர்கால இலக்கிய வகை 1. காப்பியத்துறை 2. சிற்றிலக்கியத்துறை 3. சித்தாந்ததுறை 4. இலக்கணநூல் 5. ஊரைநடை 6. தொகுப்பு முயற்சிகள் 7. நிகண்டு நூல்கள் காப்பியத்துறை – மாபெரும் காப்பியம், பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் மாபெரும் காப்பியம்         பெரும் காப்பியம             சிறு காப்பியம் 1. கம்பராமாயணம்           1. வளையாபதி            1. உதயகுமார காவியம் 2. பெரியபுராணம்             2. குண்டலகேசி            2. நாககுமார காவியம் 3. கந்தபுராணம்                 3. சீவக சிந்தாமணி     3. யசோதர காவியம்                         ...

சங்கமருவிய காலம்

 சங்கமருவிய காலம் சுருக்க குறிப்புக்கள் 3 – 6 ம் நூற்றாண்டுவரையான காலப்பகுதி, அறநூற்காலம் » சங்கங்கள் அருகிப்போனதால் இதனை சங்கமருவிய காலம் என்கின்றனர் » அரசன் தனித்து ஆட்சி செய்யாமல் பலரது உதவியை பெற வேண்டியவனாக காணப்பட்டான் பண்பாட்டு நிலை ஆரியர் வருகையால் மக்களின் பண்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. வர்ண குலதர்மம் தோற்றம் பெற்றது  மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு ஏற்படல், சமத்துவம் இல்லாது போனது. சமய நிலை அறநூற்காலமாக காணப்படல் கடவுள் வழிபாட்டு முறை காணப்படல் அந்தனர் வருகையால் புதிய கடவுள்கள் அறிமுகமாகினர் - இந்திரன், வருணன், அக்கினி, ஐயனார், சுப்பிரமணியர்  சமண முனிவர்களும் பௌத்த சன்னியாசியும் தமது கொள்கைகளை பரப்பினர் பள்ளிகளும் விகாரைகளும் போதனை இடங்களாக மாறின கி.பி 470ல் வட்சரநந்தி எனும் முனிவர் திராவிட சங்கத்தை உருவாக்கி பௌத்த பிரசங்கங்களை மேற்கொண்டார் களப்பிரரின் ஆட்சியை தொடர்ந்து மக்களிடையே சமயப்பகை ஏற்பட்டது. சங்கமருவிய காலத்தில் அதிக அறநூல் தோன்ற காரணம் யாது? சங்ககால மக்களிடையே காணப்பட்ட அதீத இன்பநுகர்ச்சி, போர் விரக்தி சமண, பொளத்த மதங்களின் கொள்கைகளை மக்களிடையே பரவச் செய...

பல்லவர் காலம்

 பல்லவர் காலம் சுருக்க குறிப்புக்கள் 6 – 9 நூற்றாண்டு வரையான காலப்பகுதி 1. பல்லவர் கால இலக்கியங்கள் இலக்கியங்கள்                                                             ; 1. திருமலை                                                                                2. திருபள்ளி எழுச்சி                                                                                                     ...

நாளை

 நாளை ######  நேற்று இன்று நாளையென்று  நேரமதும் கடப்பு வைத்து  நித்த நித்தம் ஊற வைத்த  நினைவுகளும் கடக்க விட்டு  அந்தி சந்தி பொந்து எலாம்  அலையவிட்டுக் காத்திருந்து  சொந்தப் புத்தி விட்டறிந்து  சோகக்கதைத் தட்டறிந்து  வெந்து நொந்து வேகமாகி  வேலை வட்டி பார்த்திருந்து  வந்து தந்து வரவு கண்டு  வார நாட்கள் கூடிருந்து  மெத்த மொத்தம் பார்க்கவில்லை மேனியெல்லாம் வியர்க்கவில்லை  ஆச்சி போச்சி கதைகளெல்லாம் அந்த நேரம் பார்த்திருந்து  இஞ்சி கொஞ்சி இரக்கமாகி  இணையில்லாத துவக்கமாகி வஞ்சகப்பேய் வரவு கண்டு  வருடமுற்றும் கோவை கண்டு  பித்தும் புத்தும் வைத்தெழுந்து  பிதற்றலுறும் வார்த்தைகொண்டு சஞ்சலங்கள் விட்டெறிந்து  சர மழைகள் பொழிந்திடுமே  _________ கவிஞர் ரவிகிருஷ்ணா  மட்/கிரான்குளம்

சங்கம் மருவிய காலம்

 சங்கம் மருவிய காலம் கி்.பி. 300 - 600 காலப்பகுதி சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாடு அயலார் ஆட்சிக்குட்பட்டது. சோழ நாட்டையும் பாண்டி நாட்டையும் களப்பிரர் கைப்பற்றி ஆட்சி செய்தனர். நடு நாடும் தொண்டை நாடும் பல்லவர் ஆட்சிக்குட்பட்டன. களப்பிரர் பாளி மொழியையும், பல்லவர் பிராகிருத மொழியையும் ஆதரித்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி, தமிழ்க் கலைகள், தமிழ்ப் பண்பாடு என்பன வளர்ச்சி குன்றின. தமிழ் மொழியில் பெருமளவிலும் சிறப்பான முறையிலும் நூல்கள் தோன்றவில்லை. எனவே, தமிழ் இலக்கிய வரலாற்றிலே இக்காலப் பகுதியினை சங்கம் மருவிய காலம் அல்லது 'இருண்ட காலம்' எனக் குறிப்பிடுவர். இருண்ட இக்காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றின. பதினெண்கீழக்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இக்காலகட்டத்தில் எழுந்தனவெனக் கூறுவர். இவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சங்க கால நூல்கள் என்று சிலர் குறிப்பிடுவர். இந்நூல்கள் பொருளாலும் நடையாலும் சங்க இலக்கியங்களினின்றும் வேறுபட்டுள்ளன. "அந்நூல்கள் எல்லாம் எவ்வாண்டில் எழுதப்பெற்றன என்பதை அறிந்து கோடற...

சங்க காலம் பொற்காலம்

 சங்க காலம் பொற்காலம் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலம் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. இதற்கு காரணம் அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், தமிழ்மொழி ஆட்சி, இலக்கியவளம், புலமைப்போற்றல், பண்பாடு நாகரிகம் என சொல்லிக் கொண்டே போகலாம். அரசியல்; இனக்குழு சமுதாயம் ஒழிந்து நிலவுடைமைச் சமுதாயமும் முடியாட்சி சமுதாயமும் தோன்றிய காலம் சங்க காலம் எனப்படுகிறது. ஊர்ப்புறங்கள் இனக்குழு நாகரிகத்தையும், நகரங்கள் நிலவுடைமை நாகரிகத்தையும் கைக்கொண்டிருந்தன. ஊர்ப்புறத்தலைவர்கள் குடைவோலை முறையிலும், அரசர்கள் வாரிசு அடிப்படையிலும் தேரந்தெடுக்கப்பட்டனர். போரும், பூசலும் மக்களை பெரிதாகப் பாதிக்கவில்லை. மக்கள் போர்க்காலத்தும் அமைதி வாழ்க்கையே வாழ்ந்தனர் என்பதும் போர் என்பது மன்னர்க்கும் மறவர்க்கும் உரியது என்பதும் அக்கால இயல்பாய் இருந்தது. ஒரு நாட்டு புலவரும் வாணிகரும் வேறு நாடு செல்வதற்கு எத்தடையும் விதிக்கப்படவில்லை. பொதுமக்களிடையே கிளர்ச்சி போன்றன நடைபெறவில்லை. மன்னன் மக்கள் மனமறிந்து செயல்பட்டான். மக்கள் கருத்துகளை அவர்கள் சார்பாகப் புலவர்கள் மன்னனிடம் எடுத்துக் கூறினர். நல்லாட்சி நடந்தது. தமிழ் வேந்த...

கிரான்குளம் விநாயகர்க்கு பாடல் - 5

 கிரான்குளம் விநாயகர்க்கு பாடல் - 5 ##############################  கணபதி கணபதி கணபதி என்று  காரியம் தொடங்குங்கள்  கற்பகநாதன் அருளது வேண்டி  கைகளைக் கூப்புங்கள்  ஆனைமுகனே கணபதியே....,.... அருள் தருவாயே ஜெயபதியே....... ஆற்றங்கரையினில் உறைபவனே....... ஆராத்தியுமக்கே குருபதியே.....  கிரான்குளப் பதியினில் அமர்ந்தே தினமும் அருள் மழை பொழிகின்றான் நம்பி வருவோர்க்கு நடன நாயகன் நல்லருள் தருகின்றான்  அவன் அருளாலே பாடுகிறோம் என்றும் எங்கள் வினைகளை போக்குகிறோம்  அவன் அருளாலே பாடுகிறோம் என்றும் எங்கள் வினைகளை போக்குகிறோம்  ஆனைமுகனே கணபதியே....,.... அருள் தருவாயே ஜெயபதியே....... ஆற்றங்கரையினில் உறைபவனே....... ஆராத்தியுமக்கே குருபதியே.....  கணபதி கணபதி கணபதி என்று  காரியம் தொடங்குங்கள்  கற்பகநாதன் அருளது வேண்டி  கைகளை கூப்புங்கள்  திருச்சியினுச்சியில் கோயில் கொண்டவன் அருள் தரும் நாயகனாம் ஈழத் திருமணி நாட்டின் இதய கோயிலில் அமர்ந்தவன் ஐங்கரனாம்  கூடியே நாங்கள் கூப்பிடுகிறோம் தினம் மனக்குறை எல்லாம் போக்குகிறோம்  கூடியே நா...

கிரான்குளம் விநாயகர்க்கு (பாடல் 9)

 கிரான்குளம் விநாயகர்க்கு (பாடல் 9) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏  கணங்களுக்கு அதிபதி ஆன எங்கள் கணபதி கரிமுக நாயகனாம் காக்கும் எங்கள் ஜெயபதி குலபதியாகி வந்தான் குளத்தூரன் குருபதி குருநாதனாகி வந்தான் எங்கள் தமிழ் உருப்படி  கிரான்குளத்தூர் பதியமர்ந்த கணபதியை பாருங்கள்  காக்கும் தெய்வமான எங்கள் குருதியை போற்றுங்கள் - 2  கிரான்குளம் பதியமர்ந்து அருள்கொடுக்கும் குகநிதி கிருபையாவும் தந்து அருளும் குவலயத்தோர் பெரும்பதி குன்று தோறும் குடியமர்ந்த குமரன் வேலன் சகநிதி ஈசனுமையின் பாலகனாய் இணைந்திருந்தான் பெருநிதி  கிரான்குளத்தூர் பதியமர்ந்த கணபதியை பாருங்கள்  காக்கும் தெய்வமான எங்கள் குருதியை போற்றுங்கள் - 2  அப்பனிவன் பிள்ளையென்ற பெயரெடுத்த உருப்படி ஆசை கொண்டு கூடுகிறோம் அவன்பதியாம் சந்நதி இலக்கிய நாயகனாம் இணையிலாத தம்பதி ஈடிணை இலாதவனாம் எம்மைக் காக்கும் குணபதி  கிரான்குளத்தூர் பதியமர்ந்த கணபதியை பாருங்கள்  காக்கும் தெய்வமான எங்கள் குருதியை போற்றுங்கள் - 2  சங்கடங்கள் தீர்த்து வைப்பான் அங்குசபதி கணபதி சாகசங்கள் செய்து வைப்பான் எங்கள் சார்பி...

கிரான்குளம் விஷ்ணு பெருமானுக்கு (பாடல்)

 கிரான்குளம் விஷ்ணு பெருமானுக்கு (பாடல்) &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&  மூவடியாலே உலகை அளந்தவன் எங்கள் மாயவனே முற்றுமுள்ளோர்க்கு முடிவுகள் தந்தவன் கோவிந்த கோபாலனே கிரான்குளம் மண்ணில் நித்தியமானவன் சர்வபாலகனே சங்கு நாதத்தால் சகலதும் செய்வான் எங்கள் ஜெயஹரியே........ எங்கள் ஜெயஹரியே  காஞ்சலோசன கோவிந்தா...... சியாம சுந்தர கேசவா........  கேசவா........... கேசவா........... கோவிந்த கோவிந்த கோபாலா  மூவடியாலே உலகை....................  ஆதிதேவனாய் அமர்ந்திருந்தேயருள் தந்திடுமட்சரனே அமிர்தென முன்பே காட்சி கொடுத்திடும் ஆனந்த சாகரனே பாலகிருஷ்ணனாய் பள்ளி கொண்டிடும் பாலன் கோபாலனே தேவகிநந்தனாய் அடியார்க்கருள்தரும் தர்மாதியட்சரனே  காஞ்சலோசன கோவிந்தா...... சியாம சுந்தர கேசவா........  கேசவா........... கேசவா........... கோவிந்த கோவிந்த கோபாலா  மூவடியாலே உலகை....................  ஞானேஸ்வரனாய் ஞானம் வழங்கும் காஞ்சலோசனனே  கிரான்க...

ஊஞ்சல் பாடல்

 எமது கிராமத்தின் மறைந்து போகும் ஊஞ்சல் பாடல் ஒரு கொத்து ஈச்சங்கொட்ட வறுத்துக் குத்தி ஒன்பது பேராச் சேந்து குத்தி கல்லும் மண்ணும் கலந்து குத்தி கல்லடி நாச்சிக்குக் களியாணம் கழுத்துப் பொறுக்கத் தாலிகட்டி என்ன தாலி அண்டம் தாலி என்ன அண்டம் சோத்தண்டம் என்ன சோறு பழம் சோறு என்ன பழம் வாழைப்பழம் என்ன வாழை குளத்து வாழை என்ன குளம் கிரான்குளம்.

சுயநலம்

 சுயநலம் #######  வெளுப்புக்கு மட்டும் வெள்ளையும் சால்வையும் புன்முறுவல் பூத்தமுகம் உள்ளுக்குள் என்னவோ மறுபடியும் அப்படித்தான்  தூசுபடியவிடா துடுக்குகளின் கொண்டாட்டம் உள்ளொன்று வைத்து புறமொன்று பேச்சு  சந்தர்ப்பம் வந்துவிட்டால் அள்ளிக் கையும் பாராது  அப்படியே அமுக்கம்  வெண்ணிற ஆடை மூர்த்தி வேறேதும் செய்யார் கோழிகள் முட்டையிட விலைக்குமவர் வாங்கி வைப்பார்கொக்கரிப்பை  அப்படியே கிடக்கிறது அட்ஷய பாத்திரம் தூசு துடைத்தபடி மீண்டும் பயணம் மக்களின் வாழ்வோ மறுபடியும் துயரம்  _________ கவிஞர் ரவிகிருஷ்ணா

வறிது

 வறிது ======  பேனாக்கள் பிரசவிக்க வார்த்தைகள் வறிதாகி காகிதங்களைத் தேடி அலைகிறது கடைசிவரை  காகித வறிதில் காட்சியும் கானமுமாய் வார்த்தைகள் வெளிக்கிளப்பும் ஓலமிட்ட ஒலியதனில் கப்பம் கட்டும் வீரனாகி காலமெல்லாம் குரல்கொடுக்கும்  மூக்கின் மேல் வரிகொடுத்து முறுக்குறும் மீசை முடி சவரக் கத்தியதன்  பிடியதற்கு வறிதுமாகி அழகான முகமதுவோ அலங்கோலக் கோணமாகி அல்லல் மிகவும்பட்டு அடிக்கடி முகமும் பார்க்கும் கண்ணாடியும் உடைப்பெடுக்கும் _________ கவிஞர் ரவிகிருஷ்ணா

அன்பு

 அன்பு #####  நேற்றும் இன்றும் நாளையும் அன்புதான் ஒன்றாய் அரவணைத்துக் கதை பேசும்  தாயவள் அன்பு சேயுடன் கதை பேசும் தந்தையின் அன்பு தாரகை வரமாகும்  பிள்ளையின் அன்பு பிடிவாத குணமாகும் பெரியோரின் பண்போ பேரின்ப வரமாகும்  கேட்டதைக் கொடுத்தல் அன்பாய் மலருமோ கொட்டிய வார்த்தைகள் விட்டெறிந்தோடுமோ  விட்டுக் கொடுத்தல் விண்ணையும் தாண்டும் தட்டிக் கொடுத்தல் தரணியைக் காக்கும்  மூலை முடுக்கெலாம்  முடங்கி கிடப்பேனும் பாதை வழிதொறும் பறந்தே கழிப்பினும்  அன்பின் துணையதே அரவணைப்பாகிடும் அல்லல் விட்டொரு அருளும் தந்திடும்  முடிவுடன் கூடி நாம் அன்பால் தேற்றுவோம் முற்றுகையிட்டொரு முரசமும் கொட்டுவோம்  அன்பை அன்பால் அன்பு செய்யும் அன்பே அன்பு  ________ கவிஞர் ரவிகிருஷ்ணா மட்/கிரான்குளம்

தீபாவளி வாழ்த்துக்கள்

 தீபாவளி வாழ்த்துக்கள் ****************************  தீபத்தால் ஒளிபரப்பி வரிசையிடும் தீபாவளியே இம்முறையேனும்  இணங்கியொரு தீர்வாகுமா  இலங்கையின் இன்னலுக்கு  தித்திப்பாய் வாழ்விலே தீர்வொன்று கிடைக்கும் திறனுயர்ந்து என்றென்றும் உயரட்டும் புவியோர்கள்  தீந்தமிழ் கானம் பாடி கனிவுகள் மலரட்டும் எண்ணத்தின் அலைகளவை திசையெல்லாம் மிளிரட்டும்  தீபாவளித் தினமோங்கி தீண்டாமை விலகட்டும் தீராத ஆசை விட்டு திசைகலெலாம் மலரட்டும் திரவியங்கள் இயக்குவித்து மனவலிகள் தீரட்டும்  தீவு ஒன்றாய் இணையவிட்டு தீர்க்கமுற்று ஓங்கட்டும் தீபமாய் உயரமேறி  திண்மையுடன் மிளிரட்டும்  தித்திக்கும் தேன்கலந்து  இனிய மொழி பேசட்டும்  திகட்டாத தெள்ளமுதாய் திகைப்பிழந்து வாழட்டும்  தீபாவளியே வருக தீபத்தாலொளி தருக தித்திப்பாய் சுடர் விடுக தீரா உறவு பெறுக அனைத்து உறவுகளுக்கும் தித்திக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்  ______________ கவிஞர் ரவிகிருஷ்ணா  மட்/கிரான் குளம் ஈழம்

கவிஞர் ரவிகிருஷ்ணாவின்

Image

கலைஞர் ஒன்று கூடல்

  கலைஞர் ஒன்று கூடல் *************************** கலைஞர்களின் ஒன்றுகூடல் இருக்குது மச்சான் கட்டாயம் நான் போகவேணும் சொல்லுங்கள் மச்சான் தாழங்குடா பாடசாலை மரத்தடியின் நிழலில் மங்கலமாய் ஒன்றுகூடல் மண்கமழ்ந்தொலிக்கும் பிரதேச செயலாளரும் வர்ராங்களாம் அங்கே வந்து பலவும் பேசிடவே விளைகிறோமே இங்கே கதிரவன் கலைக்கழக ஒழுங்கமைப்பில் கூடி பல அனுபவத்தின் பகிர்வுகளை விருந்தளிக்கப் போறோம் மண்முனைப் பற்றதனின் கலைஞரெலாம் அங்கே பிரதேச பெருமை பேசி கலைவளர்ப்போம் இங்கே கலாசார பேரவையின் பெருமையிலே இன்று மனமகிழ்ந்து கொள்கிறேனே மனம் நிறைவாயின்று ------------------ கவிஞர் ரவிகிருஷ்ணா மட்/கிரான்குளம்

சிட்டுக்குருவி

 சிட்டுக்குருவி எழில் மிகுந்த சிற்பங்களால் தங்கி வாழும் கூடுதன்னை எண்ணங்களால் வண்ணமாக்கி எல்லையற்று நிற்கின்றீர் சுந்தரத்தில் தேன்கலந்து சுதையினால் வடிவமைத்து சுடரென வெளிக்கிறது சிகரமெனும் சின்னமாகி உங்களின் கைவரிசை விமானத்தை விந்தை செய்து வசந்த மடம் வண்ணமாகி முன்னெளில் மண்டபமும் கதைபேசிக் களிக்கின்றன அர்த்தமுள்ள வார்த்தை கொண்டு உம் பணியை கலைப்பணியாய் இன்பமுறச் செய்கிறீரே நிகரேது உன் படைப்பதற்கு நிழலாகி பயணிக்கும் எங்கள் வாழ்வுயாவும் சிலைவடிவுச் சின்னமெலாம் கலைப் பணியை வாழ்த்துகிறோம் கருணையுடன் மெச்சுகிறோம் நிறைவுமிகு செல்வமாகி நினைவெல்லாம் வடிவமாகி உருவமதன் ரூபமாகி இனி வரும் காலமெல்லாம் இனிய வாழ்வு பேசட்டும் _________ கவிஞர் ரவிகிருஷ்ணா மட்/கிரான்குளம்

கவிஞர் ரவிகிருஷ்ணாவின் ஹைக்கூ

  கவிஞர் ரவிகிருஷ்ணாவின் ஹைக்கூ ######## நெற்றியில் வியர்வை முத்துப்போல் இருக்கிறது பற்களின் வரிசை _____________________ நீரதன் ஓட்டம் அரவமாய் தெரிகிறது சுற்றிய கயிறு _____________________ மீன்பிடித் துறையில் சனங்களின் கூட்டம் சத்தியாக்கிரகம் _____________________ பானையில் சோறு பதமாய் இருக்கிறது விளைகின்ற நிலம் _____________________ குருவியின் கூடு தொங்கிக் கொண்டிருக்கிறது மரத்தினில் வெளவால் _____________________ நீண்ட பயணம் நிலையான துன்பம் சந்தேகப் புத்தி _____________________ பசும்பாலின் செழுமை குழந்தையில் தெரிகிறது குறும்பதன் வண்ணம் _____________________ பிள்ளைகள் இன்பம் பெற்றோரின் கனவு நீடித்த வாழ்வு _____________________ பத்தும் பறப்பது பசி வந்தால் தெரியும் ஏழைகள் வாழ்வு _____________________ அந்நியர் ஆட்சி உணர்வதன் மிகுதி தகாத தண்டனை _____________________ மேற்பார்வை செய்தல் வேண்டா வெறுப்பு களப் பரிசோதனை _____________________ சொல்வது இலகு செய்வது கடினம் களத்தில் வேலை _____________________ பெறுபேறு மட்டும் பாடசாலை அடைவு பலரது...