பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி குழந்தை பிறந்தது முதல் பாடசாலைக் கல்வி முடியும் வரையுள்ள மிகவும் நீண்டதொரு காலப்பகுதியை தமது வளரும் காலமாக கொண்ட குழுவினரே பிள்ளைகள் என உளவியலாளர்கள் கருதுகின்றனர். பிள்ளையின் வளர்ச்சி என்பது கூறுகூறுகளாக ஏற்படுவதில்லை அது கற்றலுடன் சம்பந்தப்பட்ட முழுமையான வளர்ச்சியாகும். வளர்ச்சியும் கற்றலும் சேர்ந்த ஒரு முழுமையான விருத்தியிலே தான் ஒரு பூரணமான பிள்ளையை உருவாக்க முடியும். இத்தகைய இம்முழுமையான வளர்ச்சியினுள் பல கூறுகள் இணைந்துள்ளன அவற்றை நாம் ஐந்து கூறுகளாக நோக்கலாம் 1. உடல் வளர்ச்சி. 2. உள வளர்ச்சி. 3. மனவெழுச்சி வளர்ச்சி. 4. சமூக வளர்ச்சி. 5. ஒழுக்க வளர்ச்சி. எனவே பிள்ளை விருத்தி என்பது விருத்திப் போக்கின் ஒவ்வொரு பருவங்களிலும் உடல், உள, மனவெழுச்சி, சமூகம்சார், ஒழுக்க வளர்ச்சிகள் ஆகியவற்றில் ஏற்படும் முழுமையான, நிறைவான செயற்பாடாகும். இவற்றுள் மனவெழுச்சி என்பது உணர்ச்சி என்பதிலும் வேறுபாடானது. இது தூண்டல்களால் தூண்டப்படுகின்ற மனநிலையாகும் என ஸ்கின்னர் (1938) போன்ற நடத்தை வாதிகள் குறிப்பிடுகின்றனர...
ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம் 1. இக்காலத்தில் உள்ள ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய குறிப்புக்கள் எவை? • இவர் ஈழத்திலிருந்து தமிழ் நாட்டிற்குச் சென்று மதுரையிலே தங்கியிருந்து பாடல்களை இயற்றியுள்ளார் என அறிய முடிகின்றது. • இவர் எழுதிய 07 பாடல்கள் குறுந்தொகை (180,343,360), நற்றிணை (360), அகநானூறு (88, 231, 307) என்பவற்றிலுள்ளன. 2. ஈழத்துப் பூதந்தேவனாரை ஈழத்தவராக ஏற்றுக்கொள்வதற்கும், மறுப்பதற்குமாக முன்வைக்கப்படும் கருத்துக்களைத் தருக. ஏற்றுக்கொள்ளக் காரணங்கள் • பட்டினப்பாலையில் ஈழம் இலங்கையைக் குறித்தல் நீண்ட கால கலாசார பண்பாட்டுத்தொடர்பு இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே நிலவுதல் • புவியியல் ரீதியாக தமிழகம் அண்மையில் உள்ளதால் புலவர் அங்கு சென்று வாழ்ந்திருக்கலாம். • நிலைபேறான ஆட்சி இன்மையால் ஈழத்தில் புலவரை ஆதரிப்பவர் இன்றி அவர் தமிழ்வளர்த்த மதுரைக்கு சென்றிருக்கலாம். மறுக்கக் காரணம் போதிய அகச்சான்றோ, புறச்சான்றோ பாடலில் இல்லை ஈழம் என தமிழகத்தில் உள்ள ஒரு பிரதேசத்தையும் குறிக்கும் வழக்கம் (ஈழவன்கேசரி) இருந்துள்ளமை 3. இ...
கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தினர் ( KEDS ) நடாத்திய வருடாந்த சாதனையாளர் பாராட்டு விழா- 2025 கடந்த புதன் கிழமை (2025.11.05) மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது சீமூண் காடன் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு.கி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதன்மை அதிதியாக மேனாள் கிழக்குப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்களும் விசேட அதிதிகளாக மண்முனை பிரதேச கௌரவ தவிசாளர் திரு.கா.செந்தில்குமார் அவர்களும் கௌரவ அதிதிகளாக கிரான்குளம் கிராம பாடசாலைகளின் அதிபர்களும் Blossom Trust இணைப்பாளர் திரு.பு.மணிவண்ணன் அவர்களும் அழைப்பு அதிதிகளாக கிரான்குளம் கிராமத்தின் கிராம அலுவலர்களும் கிரான்குளம் கிராம பாடசாலைகளின் அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர்களும் பழைய மாணவர் சங்க செயலாளர்களும் கலந்து கொண்டதுடன் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றி 9A, 5A க்கு மேல் பெற்றோர், 6C க்கு மேல் பெற்றோர், பல்கலைக்கழக அனுமதி பெற்றோர், மற்றும் மாகாண தேசிய சாதனைகளை இணைப்பாட விதானங்களில் புரிந்தோர், இலங்கை ஆச...
Comments
Post a Comment