ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

1. இக்காலத்தில் உள்ள ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய குறிப்புக்கள் எவை?
இவர் ஈழத்திலிருந்து தமிழ் நாட்டிற்குச் சென்று மதுரையிலே தங்கியிருந்து பாடல்களை இயற்றியுள்ளார் என அறிய முடிகின்றது.
இவர் எழுதிய 07 பாடல்கள் குறுந்தொகை (180,343,360), நற்றிணை (360), அகநானூறு (88, 231, 307) என்பவற்றிலுள்ளன.

2. ஈழத்துப் பூதந்தேவனாரை ஈழத்தவராக ஏற்றுக்கொள்வதற்கும், மறுப்பதற்குமாக முன்வைக்கப்படும் கருத்துக்களைத் தருக.

ஏற்றுக்கொள்ளக் காரணங்கள்
பட்டினப்பாலையில் ஈழம் இலங்கையைக் குறித்தல் நீண்ட கால கலாசார பண்பாட்டுத்தொடர்பு இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே நிலவுதல்
புவியியல் ரீதியாக தமிழகம் அண்மையில் உள்ளதால் புலவர் அங்கு சென்று வாழ்ந்திருக்கலாம்.
நிலைபேறான ஆட்சி இன்மையால் ஈழத்தில் புலவரை ஆதரிப்பவர் இன்றி அவர் தமிழ்வளர்த்த
மதுரைக்கு சென்றிருக்கலாம்.

மறுக்கக் காரணம் 
போதிய அகச்சான்றோ, புறச்சான்றோ பாடலில் இல்லை
ஈழம் என தமிழகத்தில் உள்ள ஒரு பிரதேசத்தையும் குறிக்கும் வழக்கம் (ஈழவன்கேசரி) இருந்துள்ளமை


3. இக்காலக் கல்வெட்டுக்கள் கூறும் விடயங்கள் எவை?
யாழ்ப்பாண மன்னன் ஒவன் கேகாலை மாவட்டத்தில் உள்ள கோட்டகம எனும் இடத்தில் பொறித்த் கல்வெட்டு, ஈழமெங்கும் தமிழர்கள் பரந்து வாழ்ந்துள்ளமையை எடுத்துரைக்கின்றது.
கோட்டகம நான்கு நாட்டார் கல்வெட்டு, பண்டுவஸ்நுவர கல்வெட்டு, பதவியா, கேகாலை ஆகிய இடங்களில் கிடைத்த கல்வெட்டுக்களில் உள்ள செய்யுட்கள் செம்மையான யாப்பிலும், செழுமையான மொழிநடையிலும் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.                                                                         
                                                                                                                                                                                                                                                                                                                                                          ரவிகிருஷ்ணா
கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
மட்டக்களப்பு, கிரான்குளம் 

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை