இலங்கைத்துறை முகத்துவாரம்


இலங்கைத்துறை முகத்துவாரம்

பாலமொன்று பள்ளி கொண்டு
பருவ மழைக்கனத்தில்
வெள்ளம் ஊடுருவலாகி
கடலைச் சங்கமிக்கும்

வயல்களின் செழுமையது
வயதுவந்த தாத்தாக்கள்
வரிசைகட்டி வேலைசெய்து
தினம் தினம் உழைக்கின்றார்

ஆற்றுவாவி அரவணைப்பில்
அருகாமைப் பலவூர்கள்
தோணிகட்டி மிதந்து வந்து
துறையூர் அடைந்திடுவார்

வெருகல் முதல் போகவேணும்
பதின்மூன்றரை கிலோமீற்ரர்
ஊரு வந்து சேரும்
இருப்பினும் தேவை
சிலருக்குச் சிலகணம்
பலருக்குப் பலகணம்
முதியோருக்கு
மூன்று நான்கு மணித்தியாலம்
ஏன் ஒரு நாளென்றாலும்
தவறில்லை

வீதியுண்டு நேர்த்தியாக
செப்பனிட்டாகிக் கனகாலம்
வாகனப் பஞ்சம்
இங்கு குறுகுறுக்க

மக்களின் போக்குவரத்து
மாயலோக வித்தையாய்
தினம் தினம் lம்பெறும்
இம்சையின் நாடகம்

தொழிலுக்குப் பஞ்rமில்லை
செம்மண்ணில் விதைபோட்டு
பசும்புல்லில் மாடுவளர்த்து
வலைவீச தோணியும் கட்டி
இழுப்பார் கரைவலை கூடியொன்றாய்

மழை பொய்த்தால்
விவசாயம் பாழாகும்
ஆனிரைகள் வீணாகும்
கடலுரப்பில் கரைவலை மேடேறும்
ஓடங்கள் கரைபுரழும்

மந்திர யுத்தியென்ன
நாம் கண்டோம்
மன்னிக்க மனமில்லை
மரியாதை செய்வதற்கு
நாதியில்லை இந்த
போக்கையும் வரத்தையும்
எண்ணிப் பாu;க்கையில

அரசியல் குதிப்போர்
வோட்டுக்கேட்டு வாசல் நிற்பார்
வெண்டார் பின் சென்றார்
வெட்கித் தலைகுனிவார்
அரசியல் பேச்சாகி
நீரிட்ட உப்பதுவாய்
காணா மறைந்து போவார்

யாரிடம் கேட்பது
போக்குக்கும் வரத்துக்கும்
நாளுக்கு மூன்று முறை
வஸ் நகர்வு செய்ய
ஏனெனில் நாமிருக்கும் நாடு நமது.


ரவிகிருஷ்ணா
கிரான்குளம்


Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை