Posts

Showing posts from May, 2025

தோற்றாலும் விடமாட்டேன்

 தோற்றாலும் விடமாட்டேன் ######################  வீழ்ந்தாலும் மீண்டும் எழடா விரும்பியே சூரியனாய் வெழடா நிழலாலும் பயம் இல்லை நாளைய வெற்றிக்கு பயணம் செய்  வார்த்தைகள் உனைத் தாழ்த்தினாலும் வலிமை உன் உள்ளத்தில்தான் பிறக்கும் தடைகள் உனக்கு பாடமாகி தாண்டி செல்வதுதான் சாதனை  தோல்வி ஒரு தருணம் மட்டும் தொலைவே உனக்கு நிரந்தரம் கிடையாது. வெற்றி உன்னைத் தேடிவரும் விடாமுயற்சியிலே தான் நம்பிக்கை எழும்  உன் பயணம் முடிவற்றது உன்னையும் தாண்டும் கனவுகள் நிறைந்தது தோற்றாலும் விடமாட்டேன் என்று இறுதிவரை நீயாகவே வாழ்வாய் கவிஞர் ரவிகிருஷ்ணா

நிழலின் வசத்தில்.......

 நிழலின் வசத்தில்....... ====================  மரம் ஒன்று விருட்சமாகி வானளாவி உயர்ந்து நிற்க வெயிலதன் கனத்தினுக்கே நல்ல நிழல் தந்துதவும் நிழலின் மீது சித்திரங்கள் ஓவியமாய் தான் விரிய  பட்சிகளின் பரவசத்தில் பாடிநானும் கழிக்கும் எண்ணம் கூட்டமாக குவிந்து நிற்கும் பசுக்களிடம் கேட்டுப் பார்க்க ஆசை கொஞ்சம் வந்தெனக்கு அள்ளி அள்ளி இறைக்கிறது  கனத்த வெயில் தன்னினுள்ளும் மெல்லிதான தென்றல் ஒன்று வானம்பாடி வருகையிலே பழுத்த இலை விழுகும் சத்தம் பண்ணிசையாய் விரிகிறது  வெயில் குழி தேகமதோ தண்மை நிழல் நாடி நிற்க ஈட்டுக்குப் போட்டியதாய் பறவைகளின் பறப்பொலிகள்  கதை ஒன்று சொல்லி வந்து கவிதையாய் விரிகிறது நெற்றியில் பொட்டு வைத்த வதனம் எல்லாம் வாடி நின்று ஏதேதோ கதைகள் பேசி எத்தனிக்கும் வெயிலில் நீங்க _________________________ கவிஞர் ரவிகிருஷ்ணா  மட்/கிரான்குளம்

தோற்றாலும் விடமாட்டேன்

 தோற்றாலும் விடமாட்டேன் ######################  வீழ்ந்தாலும் மீண்டும் எழடா விரும்பியே சூரியனாய் வெழடா நிழலாலும் பயம் இல்லை நாளைய வெற்றிக்கு பயணம் செய்  வார்த்தைகள் உனைத் தாழ்த்தினாலும் வலிமை உன் உள்ளத்தில்தான் பிறக்கும் தடைகள் உனக்கு பாடமாகி தாண்டி செல்வதுதான் சாதனை  தோல்வி ஒரு தருணம் மட்டும் தொலைவே உனக்கு நிரந்தரம் கிடையாது. வெற்றி உன்னைத் தேடிவரும் விடாமுயற்சியிலே தான் நம்பிக்கை எழும்  உன் பயணம் முடிவற்றது உன்னையும் தாண்டும் கனவுகள் நிறைந்தது தோற்றாலும் விடமாட்டேன் என்று இறுதிவரை நீயாகவே வாழ்வாய் கவிஞர் ரவிகிருஷ்ணா

மாணவருலகம் (பாடல்)

 மாணவருலகம் (பாடல்) 👫👫👫👫👫👫👫👫👫👫  மாணவருலகம் என்ன அது மல்லிகையாய் மணம் வீசிடுது புன்னகையே புதிராகிடுது புதியதோர் பொக்கிசம் தேடிடுது  தேடுது தேடுது தேடுது - மனம் பாடுது பாடுது பாடுது உச்சந் தலையினில் ஊறுது உள்ளுக்குள்ளே கனவாகுது  வானம் தொடுகின்ற கனவு அது வாழ்வில் நம்பிக்கைக் கதிர்களது அறிவியல் பயணம் அவர்களது அறவியல் பாடம் ஆகியது  தேடுது தேடுது தேடுது - மனம்............,.  பாடநூல் கையில் தவழ்கிறது பாதையில் அவர்கள் உறுதியது ஆசிரியர் வார்த்தை ஏணியது அறிவெலாம் தினமும் தேடியது  தேடுது தேடுது தேடுது - மனம்............,.  முயற்சியை தினமும் தோழனென மூச்சது கையதில் இலக்குமென முடிந்தவை எல்லாம் கனவுமென முகமது மகிழ்வே அவர்களது  தேடுது தேடுது தேடுது - மனம்............,. __________________________ கவிஞர் ரவிகிருஷ்ணா  மட்/கிரான்குளம்

கிராமத்து வாழ்க்கை

 கிராமத்து வாழ்க்கை  #################  பசுமை புல்வெளி பரந்து படர்ந்த வயல்கள் கலந்து பாணி குடில் எங்கும் அமைதி, பாரதி சொன்னது போல நம்பிக்கை!  கோழி கூவும் காலை விழிப்பே குளத்தில் நீந்தும் பசுக்களின் பரிசம் நெல் மணம் காற்றில் பசுமை வீசும்  நெஞ்சில் நிலா போல் நிம்மதி பேசும்  ஊரின் விழிப்பாய் உதயசூரியன்  ஊரின் நடுவில் ஒளிரும் உறவுச் சங்கிலிகள் நேசம் மலரும் நேர்மை வாழ்வில் நாமே நமதென்ற நம்பிக்கை வாழ்வில்  தூய்மை மனமும் தொழிலில் தவமும் துளிக்காது பொய் இன்றி நேர்மை தனமும் வாழும் வண்ணம் இயற்கையோடு வார்த்தை போல் ஒளிரும் வாழ்க்கைதான் இது! இது நம் கிராமத்து வாழ்விலோர் கீதம், எளிய மக்களின் உயர்ந்த பரிசு முத்தம். கவிஞர் ரவிகிருஷ்ணா