Posts

Showing posts from February, 2026

காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

Image
 காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? ======================================= காதலர் தினம் உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும். இந்த நாள் காதலை வெளிப்படுத்தும் நாளாக கருதப்படுகிறது. மனித வாழ்க்கையில் காதல் என்பது மிக முக்கியமான உணர்வாகும். அன்பும் பரிவும் நிறைந்த உறவுகளை நினைவுபடுத்துவதற்காகவே காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தின் தொடக்கம் வரலாற்றில் இருந்து வருகிறது. ரோமப் பேரரசில் “செயின்ட் வாலென்டைன்” என்ற கிறிஸ்தவ பாதிரியார் இருந்தார். அக்காலத்தில் அரசன் திருமணத்தைத் தடை செய்திருந்தான். ஆனால் வாலென்டைன் இளம் காதலர்களுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்தார். இதனால் அரசன் அவரை கைது செய்து மரண தண்டனை வழங்கினான். அவர் இறந்த நாள் பிப்ரவரி 14 ஆகும். அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் இந்த நாள் “வாலென்டைன் தினம்” என அழைக்கப்பட்டது. பின்னர் அது காதலர் தினமாக பரவலாக கொண்டாடப்படத் தொடங்கியது. காதலர் தினம் காதலர்கள் மட்டும் கொண்டாடும் நாளாக இல்லாமல், அன்பை வெளிப்படுத்தும் நாளாகவும் உள்ளது. காதல் என்பது காதலர் காதலிக்கு மட்டும் அல்ல; அது பெற்ற...

எது சுதந்திரம்

Image
 எது சுதந்திரம் ============= எது சுதந்திரம்? சங்கிலிகள் உடைத்தெறிந்து மனம் தன்னைத் திறந்த நொடியா? பேச உரிமை கிடைத்த பொழுதா பேசாமல் இருக்கத் தீர்வு  கிடைத்த வலுவா? பயம் இல்லாத  நட்புறவுப் பாதையா பயத்துடன் நடந்தாலும்  தலை தன்னை நிமிர்த்திடும் தைரியமா? வானமது எல்லையா எல்லையை மறக்கும்  மிடுக்குப் பார்வையா? வயிறு நிரம்பும் பிண்டமா பிறருக்குப் பகிரும் பண்டமா? புள்ளடி போடும் விரலா நீதி தேடும் குரலா? ஆணை மறுக்கும் நிறை தைரியமா தவறை ஒப்புக்கொள்ளும் பணிவா? மதம் தாண்டும் மனிதமா மொழியும் தாண்டும் அன்புடமையா? நிறம் தாண்டிடும் நட்பா இனம் தாண்டும் சமத்துவமா? கல்வி தருவிக்கும் கண்களா கேள்விகள் கேட்கின்ற துணிவா? உழைப்பின் வியர்வைத் துளிகளா வியர்வைத் துளிகளுக்கு மதிப்பா? மனங்கொளும் சிரிப்பா பேதைமைக் களிப்பா? குழந்தையாய் கனவா கனவுகள் கலைக்காத உலகா? இயற்கையின் சுவாசமா அதை துணிவுடன் காக்கின்ற பொறுப்பா? சட்டத்தை எழுதிடும் கையா மனிதத்தை எழுதிடும் மனமா? எதிர்ப்பினைச் சகிப்பதா வேறுபாட்டை வாழ்த்துவதா? மௌனத்தை உடைக்கின்ற குரலா குரலதைக் காயப்படுத்திடா செவிகளா? நினைவுகளை மதிப்பதா எதிர்காலத...