Posts

Showing posts from August, 2025

வாசிப்புக்கு சவாலாகும் தொலைபேசி

Image
  வாசிப்புக்கு சவாலாகும் தொலைபேசி ############################### இன்றைய நவீன உலகில், தொலைபேசி மனித வாழ்வின் அன்றாடத் துணையாகிப் போயுள்ளது. தொடர்பாடல், தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு, வணிகம் என அனைத்தையும் ஒரு விரல் தொட்டிலேயே நமக்கு கிடைக்கச் செய்கிறது. ஆனால், இந்த வசதியுடன் சில மறைமுக சவால்களும் வந்து சேருகின்றன. குறிப்பாக வாசிப்புப் பழக்கத்திற்கு தொலைபேசி ஒரு பெரும் தடையாக மாறி வருகிறது. முன்பு, மக்கள் பொழுதைக் கழிப்பதற்கு நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள் போன்றவற்றை வாசிப்பது வழக்கம். அந்த வாசிப்பு பழக்கம் அறிவை வளர்க்கும் விதமாகவும், சிந்தனையை ஆழப்படுத்தும் விதமாகவும் இருந்தது. ஆனால் இப்போது, அந்த நேரத்தை பெரும்பாலும் தொலைபேசி திரையில் சமூக வலைத்தளங்கள், வீடியோக்கள், குறும்படங்கள் போன்றவற்றில் செலவழிக்கின்றனர். இதனால் ஆழமான வாசிப்பிற்கான ஆர்வம் குறைந்து வருகிறது. தொலைபேசியின் மிகப்பெரிய கவர்ச்சி "உடனடி திருப்தி" ஆகும். ஒரு பொத்தானைத் தொட்டால் நொடிகளில் தகவலும் பொழுதுபோக்கும் கிடைக்கிறது. இதன் காரணமாக, நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு ஒரு நூலை வாசித்து ரசிப்பது கடினமாகிறது. மனித...

சேவை

  சேவை ++++++ நட்ட பயிர் வளரவில்லை நாணயங்கள் விளையவில்லை முத்து போல் சிரிப்பு மட்டும் மூக்குநூனி வருகிறது பேசிவிட வார்த்தை இல்லை பேசாத நேரமில்லை அஞ்சுகின்ற பொழுதிலெல்லாம் அவரவர் வேலை மட்டும் சுயநலங்கள் மிஞ்சி வந்து சூடுபிடி கதைகள் பேசும் அஞ்சியவர் மட்டுமங்கு அயராது உழைத்துச் செல்வார் மிஞ்சியவர் எல்லாம் கூடி மிடுக்கான கதைகள் பேசி வஞ்சினம் கூடி வந்து வரவழைத்து பாடி நிற்பார் பிள்ளைகள் வாழ்வுதன்னை பிடித்தெடுக்கும் பிசாசுகள் போல் நாளெல்லாம் கழித்து நிற்பார் நயமிலா சேவகராய் முத்து போல் பல்லை காட்டி முன் நின்று புன்முறுவல் செய்தாக்கால் போதுமென்று சேவை செய்ய வந்து விட்டார் _________ கவிஞர் ரவிகிருஷ்ணா மட்/கிரான்குளம்

முத்துக்குமார் என்ற கவிஞன்

 முத்துக்குமார் என்ற கவிஞன் ######################## அணிலாடும் மூன்றிலில் தொடங்கியவன் அத்தனையும் இதுவென வித்தகமாய் சொல்லியவன் அன்னை தந்தை  மகன் மகள் பேத்தி  மட்டுமல்ல இயற்கை செயற்கை அத்தனையும் கவியால் கோர்த்து  மாலை வடித்து எதிர்கால சந்ததி சூடக் கொடுத்தவன் நித்தில மனித மாணிக்கமாய் என்றும்  அத்தனை கவி உள்ளங்களின்  கரம் கோர்த்து  வார்த்தை மழை பொழிந்து  எழுத்து கோலின் தேயிலே சங்கமம் படித்து  அதற்கு நித்த நித்தம் அர்த்தத்தை கொடுத்து பேசு பொருளாகியவன் சிந்தையில் குடிகொண்ட  அணையாத ஒளிவீச்சாய் வரிகளை சிந்தனையை வார்த்தையை  இலக்கிய உந்துகையை  கவிதையால் வடித்து  காலம் பாடியதாய் சொல்லிவிட்டு சென்றவன் முத்துக்குமார் என்ற பெயர்  முழுமையும் செய்யும் கவிதை காதலனாய்  கவிஞன் என்ற பேரவனாய் விட்டுச் சென்ற தடையங்கள்  இன்னமும்  சுவாசிக்கப்பட்டு கொண்டே  இருக்கின்றன காலத்தின் வேர்  இன்னும் பற்றுதலில் இருந்து நீங்கவில்லை  தொடர்ந்தும் பற்றுதலுடனேயே பயணிக்கின்றது அதுவரை அவன்  பெயர் நிலைக்கும்  அதுதான் மு...

உறக்கம் தேடிய இரவுப் பொழுதுகள்

 உறக்கம் தேடிய இரவுப் பொழுதுகள் ############################## நிரந்தர உறக்கம் கொள்ளும்  எங்கள் மீதிருக்கும் கல்லறைகளிடம் கேட்டுப் பாருங்கள்  எங்கள் பிஞ்சுகள் முதல் முதுசம்வரை காத்துக் கடனேற்றிட செய்த அற்பணங்கள் ஏராள ஏராளம் சூடுபிடி பூனை  அடுப்பங்கரை நாடுவது போல்  பகல் முழுக்க பதுங்கு குழியில் பதுங்கியிருந்து  இரவு முழுக்க நாங்கள்  தூக்கங்களை விற்றிருந்தோம் பறவைகள் கூட இரை தேடி வீடு திரும்பும் அதற்கான வழி கூட இல்லாமல் நாங்கள் எங்கள் ஏற்றப் பாதையில் தொடர்ந்து பயணித்த நாட்கள் அதிகம் அதிகம் அருகிருந்த தோழனும்  அரவணைத்த நண்பனும்  அறிவுரைத்த தலைவனும் அருகிருந்து கதை பேசுகிறார்கள் அவர்கள் கல்லறைகளில்  விட்டெறிந்த வீச்சு வலை கிளிபட்டு நாஸ்தியானது அன்னியத்தின் வீச்சு அப்படியே அள்ளிக் கொண்டு போய்விட்டது  காலம் தன் முகத்தில்  அள்ளிப் பூசிய கரி வடுக்கள்  இன்னும் மாறவில்லை  இனியும் மாறப்போவதில்லை இருப்பினும் மண் பற்றும்  மதிப்புரையும் உள்ள உள்ளங்கள்  எங்கள் பெயர்களை உச்சரிக்கத் தவறாமல் நின்று செல்லத்தான் போகிறது எங்ளுக்...
 https://www.facebook.com/share/p/173zqhHMLX/

கிரான்குளம் விநாயகர்க்கு பாடல் - 12

Image
  கிரான்குளம் விநாயகர்க்கு பாடல் - 12 ==================================  அறுகம்புல்லில் மாலை கட்டி அவனை வேண்டுவோம்  அருள் கொடுக்கும் ரகசியத்தை கேட்டு வாங்குவோம் அரச மரத்தின் நிழல் தனிலே வீற்றிருக்கிறான் அவன் அடிவரின் குறையனைத்தும் தீர்த்து வைக்கிறான் கணபதி தீர்த்து வைக்கிறான் கணபதி.......  கணபதி....... கணபதி.......  கணபதி....... குருபதி......... குருபதி......... குருபதி......... குருபதி......... எங்கள் குருபதி கிரான்குளத்தில் கோயில் கொண்டான் கிருபை கணபதி  கிழக்குவானே அவனுக்கென்றும் உதயப் பெருநிதி மக்களுளம் கொள்ளை கொண்ட மன்னனுமவனே மறை முதல்வனாகி காட்சி தரும் முதல் கரிமுகனே முதல் கரிமுகனே அறுகம்புல்லில் ............ கணபதி.......  கணபதி....... கணபதி.......  கணபதி....... குருபதி......... குருபதி......... குருபதி......... குருபதி......... எங்கள் குருபதி முதல் வணக்கம் செய்து நாங்கள் கருமமாற்றுவோம் முந்தி நின்று அவன் பதத்தை தேடி நாடுவோம்  பிள்ளையாக வந்து நின்று பிணக்கறுப்பவன் அவன் வினை அறுத்து வாழ்வு தன்னை உயரச் செய்பவன் இவன் உயரச் செய்பவன் அறுகம்ப...

தாந்தாமலை முருகனுக்கு ஒரு பாடல்

Image
  தாந்தாமலை முருகனுக்கு ஒரு பாடல் ################################### மலையில் வாழும் குன்றுக் குமரன் மக்கள் குறைகள் தீர்க்கிறான் தாந்தா மலையின் உச்சியிருந்து சர்வ வினைகள் களைகிறான் சர்வ வினைகள் களைகிறான் தாந்தா மலை ....... தாந்தா மலை.......... தாந்தாமலை ................ இது கிழக்கு மண்ணிலே  உயர்ந்த மலை அப்பனவர்க்கு பாடம் சொன்னான் அன்று குமரனே  அறிவுரைகள் தான் கொடுத்தான் இளைய திலகமே  கானகத்தின் நடுவிருந்தான் கனிவுடனவனே கருணை உள்ளம் தான் படைத்தான் தாந்தா அப்பனே தாந்தா அப்பனே மலையில் வாழும்.................. தாந்தா மலை ....... தாந்தா மலை.......... தாந்தாமலை ................ இது கிழக்கு மண்ணிலே  உயர்ந்த மலை மூர்த்தி தலம் தீர்த்தமென்று முழுமையும் பெற்றவன் அவன் முழுமனதாய் வேண்டுவோர்க்கு முழுமை செய்கிறான் ஐங்கரனுக்கிளையவனாம் கந்தன் முருகனே  அவன் எழில் முகமே என்றுமெங்கள் உதய வாசமே உதய வாசமே மலையில் வாழும்.................. தாந்தா மலை ....... தாந்தா மலை.......... தாந்தாமலை ................ இது கிழக்கு மண்ணிலே  உயர்ந்த மலை மட்டுவாவி மேற்கினிலே உறைவிடம் கொண்டான்...

கிரான்குளத்தூர் காளியம்மனுக்கு பாடல்

Image
  கிரான்குளத்தூர் காளியம்மனுக்கு பாடல் ###################################### கிரான்குளத்திலே கோயில் கொண்டருள் புரிபவள் காளியம்மா எல்லையில்லாதொரு ஆனந்தம் தருபவள் எங்களின் தேவியம்மா எங்களின் தேவியம்மா பத்ரகாளி பத்ரகாளி  பத்ரகாளி பத்ரகாளி பத்ரகாளி  பத்ரகாளி பத்திர.................... காளியம்மா - 2 தீயின்மிதிப்பிலே திக்கனைத்துமே நிறைந்திடும் வாசலிலே தீய வினைகளை அகற்றிடும் உந்தன் திரவியம் தான் பெரிதே  தேனின் இனிமையாய் தெரிகிறதுந்தன் அருள்மழைதானதுவே துன்பம்தன்னையே துரத்தியென்றுமே துணையாய் வருபவளே அம்மா துணையாய் வருபவளே கிரான்குளத்திலே................ பத்ரகாளி பத்ரகாளி  பத்ரகாளி பத்ரகாளி பத்ரகாளி  பத்ரகாளி பத்திர................... காளியம்மா - 2 பூரணை தோறும் விரதமிருப்பவர் பூரணமாகின்றார் பூவையவளது பூசையில் கலப்பவர் புதுப்பொலிவாகின்றார் போற்றியவளது சேவடியதனைக் கூப்பியே வணங்கிடுவோம் நித்தம் காப்பவளவளாம் கருணையை நாமும் வேண்டியே போற்றிடுவோம் அம்மா வேண்டியே போற்றி விடுவோம் கிரான்குளத்திலே................ பத்ரகாளி பத்ரகாளி  பத்ரகாளி பத்ரகாளி பத்ரகாளி  பத்ரகாள...

கிரான்குளம் மாரித்தாய்க்கு பாடல்

Image
  கிரான்குளம் மாரித்தாய்க்கு பாடல்  ================================ ஆத்தாளே மாரியம்மா அருள் கொடுப்பாள் தேவியம்மா  கிரான்குளத்து மண்ணினிலே கிருபையுடன் வந்தவளாம் குங்குமத்தில் தான் நிறைந்தாள் குலக்கொழுந்தே நாயகியாம் ஆத்தாளே மாரியம்மா ........... வருவாளம்மா........... வருவாளம்மா ........... வருவாளம்மா ........... அருள் தருவாளம்மா ஐங்கரனுக் அருகிருந்தே அத்தனையும் காப்பவளாம் ஔஷதமாய் வேப்பிலையை அள்ளியள்ளித் தருபவளாம் தஞ்சமென்று வருபவரைத் தயவுடனே காப்பவளாம் ஆலமரத்தருகிருந்து அத்தனையும் பார்ப்பவளாம் ஆத்தாளே மாரியம்மா ........... வருவாளம்மா........... வருவாளம்மா ........... வருவாளம்மா ........... அருள் தருவாளம்மா நெஞ்சினிலே நிறைந்திருப்பாள் நேயமுள்ள நாயகியாம் அண்டமெல்லாம் காத்திடுவாள் அகிலாண்ட ஈஸ்வரியாம் நாவினிலே நடம்புரியும் நவரசத்தின் தேவியளாம் துன்பமொன்று வருகையிலே துணையாக நிற்பவளாம் ஆத்தாளே மாரியம்மா ........... வருவாளம்மா........... வருவாளம்மா ........... வருவாளம்மா ........... அருள் தருவாளம்மா கிரான்குளத்தூர் மக்கள் மனம் நிறைந்திடவே நிற்பவளாம் கும்பத்தழகியம்மா குங்குமமே காத...

விதைத்தது யார்

 விதைத்தது யார்  ################ அகாலிப்புகளாய் வரும் இந்தக் காட்சிகளைக் காண மனம் பொறுக்குதில்லையே விதைத்தது யார் பால் மணம் மாறாத பச்சிளங்குழந்தையும் பருவமெய்தாத பருவப் பிள்ளைகளும்  உயிர் கொண்ட அரக்கன் ஒருவன்  பிழிந்தெடுத்து சக்கையாக்கி விட்டுருக்கிறான் காளை அடக்கும் வீரனும் கருத்து வந்த பாலனும் நெஞ்சில் வீரம் கொண்ட தோழனும் துப்பாக்கி முனை ஒன்றின் கட்டுப்பாட்டில் கவர்ந்து இழுத்து  நசுக்கி நாசகரம் செய்யப்பட்டதோ வருவேன் என்று சொல்லிவிட்டு வழி நடந்த கணவன் வரவில்லை  விளையாடச் சென்று விட்டில் போல் பறந்த விளையாட்டுப் பிள்ளையும் வரவில்லை  பள்ளி சென்று பக்குவமாய் படித்த பருவப்பிள்ளையும்  வரவில்லை பசியோடு காத்திருக்கும் பிள்ளைகளுக்கு உணவுக்காக உழைக்கச் சென்ற உத்தமரும் வரவில்லை பசிபோக்க யாருமில்லை  பசிக்கான விருந்தாகியவை எல்லாம் துப்பாக்கி ரவைகள் ஆகின பசி மயக்க தூக்கம் என்று  என்ன தோன்றினாலும் அவர்களது தூக்கம் நிரந்தரமாகியது பூமியின் மேல் அல்ல அதன் ஆழத்தில் அவர்களது தூக்கத்தை அன்று கயவர் கூட்டம் கண்மூடி கழித்து விட்டது பறித்துக்கொண்ட தூக்கத்துக்க...