Posts

Showing posts from November, 2024

அப்பா என்பது அதிசயமான புத்தகம்

 அப்பா என்பது அதிசயமான புத்தகம் ##############################  அப்பா என்பது  அதிசயமான புத்தகம்  ஆசைகள் தீர்த்திடும்  அருமையின் பெட்டகம்  இன்பமே இலக்களிக்கும்  இனிமையின் சட்டகம்  ஈதலின் நாயகன்  இணையில்லா தலைமகன்  எங்கள் குடும்பத்தின்  தலை மகன்  உண்மையின் உயிராகி  உலவிடும் நாயகர்  உதிரமோ தந்தெமை  உலகிலே விட்டவர்  ஊரிலே அவர் பெயர்  பிள்ளையால் நிலைக்கனும்  என்றே என்றென்றும்  உரைத்திடும் போதகர்  எங்களின் எண்ணமோ  எல்லாமாய் நலம் பெற  ஏணியாய் உயர்ந்துமே  என்றென்றும் நிற்கின்ற  எண்ணமாய் உயர்ந்தவர்  இவர் எல்லையில்லா காவலர்  ஏக்கங்கள் தீர்த்திடும்  எங்களின் பேறவர்  உயர்வினில் மகிழ்ந்துமே  பேரெழில் கொள்பவர்  எத்தனை எத்தனை  ஜென்மங்கள் எடுப்பினும்  எங்களால் என்னதான்  செய்யணும் தியாகமான தீபமே  ஐயையோ என்று நாம்  அலறிய போதிலும்  அன்பாய் அவர் வந்தே  அரவணைத்து நிற்பவர்  எங்கள் தந்தையாம் திருமகன்  இவர் குணத்திலே உ...

அணை கடந்த அரசியல் வெள்ளம்

 அணை கடந்த அரசியல் வெள்ளம் ############################  அன்றொரு நாள் காலையிலே ஆரவாரமாய் நான் எழும்பி  அவசரமாய் புறப்பட்டேன்  நீண்ட பயணம் செல்லவென்று  சோ என்ற மழை  சோபனமாய் பெய்யத் தொடங்கியது எங்கு பார்த்தாலும்  வெள்ளக் காடாகி தொப்பட்டம் தொப்பட்டம்  வானமும் பூமியும் நோக்கியபடி  என் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்கின்றது  இடியும் முழக்கமும் முகாரி பாட ஆரம்பித்திருந்தன இருப்பினும்  அடிக்கடி சூரியன்  ஓரக் கண்களை  எங்கள் பக்கம் நீட்டி நீட்டி  செல்லுகிறான் வில்வளைவாய்  வானவில்லும் அன்நேரம்  அரும் பெரும் காட்சியாகிறது  சில கணங்கள்  பொந்தில் இருந்து  வெளியேறும் எறும்புக் கூட்டங்களாய் மனிதப் பிரளயங்கள்  அங்குமிங்கும் பிரகாசிக்க ஆரம்பித்தது  பயணங்கள் தடைப்பட்டு  பாதைகள் அடைபட்டு வீடுகள் தோறும்  வெள்ளம் தன்னை  விளம்பரம் செய்து கொள்கிறது  அதி குளிர்தன்னில் அவதியுற்று இருப்பதற்கு கூட இடமில்லாது தவிக்கின்ற மனித நேயங்கள் சில வரிசையிட்டு தஞ்சமாகிறது  மாடி வீட்டு பாடியதனில்...

தலை இருக்க வாலாடும்

  தலை இருக்க வாலாடும் ××××××××××××××××××××××× தலைவர் என்ற பெயரெடுத்து தன்னிகராய் இருக்கையிலே மற்றொன்று உள் நுழைந்து மருவினைகள் செய்து வைக்கும் உச்சி மீது வானமேறி உரையெழுதும் பொழுதுமாகி விண்ணை முட்டும் கதைகள் பேசி விதைத்து வைக்கும் மொழிபலவும் சிங்கமான வார்த்தை கொண்டு சிரத்தின் மீதில் ஏறி நின்று சீர்குலைந்த வார்த்தை பேசி சிறுமைத்தனம் இட்டு வைக்கும் முந்தி நின்று மூக்கறுக்கும் முறுகலான செயலும் பண்ணும் மூத்த வாக்கு விட்டெறிந்து முப்பது நாள் காவலாகும் சுற்று முற்றுடும் பார்க்க மாட்டார் சுடர் விடவே சூழ்ந்திருப்பார் ஆன பொருள் அறிவியல்லாம் அள்ளியள்ளி இறைத்து வைப்பார் மின்னுகின்ற தாரகையாய் மினுமினுப்பாய் வந்து போவார் மிச்ச சொச்சம் பார்க்க மாட்டார் மடுக்கான வேலை செய்வார் ஐந்து விரல் கரமதனால் அவதியுற்ற நடத்தைக் கோலம் அல்லலுற்று தேறியபின் அப்போதேதான் பின்னிழுப்பார் இவ்வரிய செயலில் மட்டும் இணக்கமாகி சேவை செய்ய எத்தனங்கள் பார்த்திருப்பார் என்றும் இல்லா சேவகர் தான் __________ கவிஞர் ரவிகிருஷ்ணா மட்/கிரான்குளம்

சோழர் காலம்

 சோழர் காலம் சுருக்க குறிப்புக்கள் கி.பி 9 – 14 நூற்றாண்டுவரையானக் காலப்பகுதி 400 ஆண்டுகால ஆட்சி இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம், காவியக்காலம் 1. சோழர்கால இலக்கியங்கள் சோழர்கால இலக்கிய வகை 1. காப்பியத்துறை 2. சிற்றிலக்கியத்துறை 3. சித்தாந்ததுறை 4. இலக்கணநூல் 5. ஊரைநடை 6. தொகுப்பு முயற்சிகள் 7. நிகண்டு நூல்கள் காப்பியத்துறை – மாபெரும் காப்பியம், பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் மாபெரும் காப்பியம்         பெரும் காப்பியம             சிறு காப்பியம் 1. கம்பராமாயணம்           1. வளையாபதி            1. உதயகுமார காவியம் 2. பெரியபுராணம்             2. குண்டலகேசி            2. நாககுமார காவியம் 3. கந்தபுராணம்                 3. சீவக சிந்தாமணி     3. யசோதர காவியம்                         ...

சங்கமருவிய காலம்

 சங்கமருவிய காலம் சுருக்க குறிப்புக்கள் 3 – 6 ம் நூற்றாண்டுவரையான காலப்பகுதி, அறநூற்காலம் » சங்கங்கள் அருகிப்போனதால் இதனை சங்கமருவிய காலம் என்கின்றனர் » அரசன் தனித்து ஆட்சி செய்யாமல் பலரது உதவியை பெற வேண்டியவனாக காணப்பட்டான் பண்பாட்டு நிலை ஆரியர் வருகையால் மக்களின் பண்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. வர்ண குலதர்மம் தோற்றம் பெற்றது  மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு ஏற்படல், சமத்துவம் இல்லாது போனது. சமய நிலை அறநூற்காலமாக காணப்படல் கடவுள் வழிபாட்டு முறை காணப்படல் அந்தனர் வருகையால் புதிய கடவுள்கள் அறிமுகமாகினர் - இந்திரன், வருணன், அக்கினி, ஐயனார், சுப்பிரமணியர்  சமண முனிவர்களும் பௌத்த சன்னியாசியும் தமது கொள்கைகளை பரப்பினர் பள்ளிகளும் விகாரைகளும் போதனை இடங்களாக மாறின கி.பி 470ல் வட்சரநந்தி எனும் முனிவர் திராவிட சங்கத்தை உருவாக்கி பௌத்த பிரசங்கங்களை மேற்கொண்டார் களப்பிரரின் ஆட்சியை தொடர்ந்து மக்களிடையே சமயப்பகை ஏற்பட்டது. சங்கமருவிய காலத்தில் அதிக அறநூல் தோன்ற காரணம் யாது? சங்ககால மக்களிடையே காணப்பட்ட அதீத இன்பநுகர்ச்சி, போர் விரக்தி சமண, பொளத்த மதங்களின் கொள்கைகளை மக்களிடையே பரவச் செய...

பல்லவர் காலம்

 பல்லவர் காலம் சுருக்க குறிப்புக்கள் 6 – 9 நூற்றாண்டு வரையான காலப்பகுதி 1. பல்லவர் கால இலக்கியங்கள் இலக்கியங்கள்                                                             ; 1. திருமலை                                                                                2. திருபள்ளி எழுச்சி                                                                                                     ...

நாளை

 நாளை ######  நேற்று இன்று நாளையென்று  நேரமதும் கடப்பு வைத்து  நித்த நித்தம் ஊற வைத்த  நினைவுகளும் கடக்க விட்டு  அந்தி சந்தி பொந்து எலாம்  அலையவிட்டுக் காத்திருந்து  சொந்தப் புத்தி விட்டறிந்து  சோகக்கதைத் தட்டறிந்து  வெந்து நொந்து வேகமாகி  வேலை வட்டி பார்த்திருந்து  வந்து தந்து வரவு கண்டு  வார நாட்கள் கூடிருந்து  மெத்த மொத்தம் பார்க்கவில்லை மேனியெல்லாம் வியர்க்கவில்லை  ஆச்சி போச்சி கதைகளெல்லாம் அந்த நேரம் பார்த்திருந்து  இஞ்சி கொஞ்சி இரக்கமாகி  இணையில்லாத துவக்கமாகி வஞ்சகப்பேய் வரவு கண்டு  வருடமுற்றும் கோவை கண்டு  பித்தும் புத்தும் வைத்தெழுந்து  பிதற்றலுறும் வார்த்தைகொண்டு சஞ்சலங்கள் விட்டெறிந்து  சர மழைகள் பொழிந்திடுமே  _________ கவிஞர் ரவிகிருஷ்ணா  மட்/கிரான்குளம்

சங்கம் மருவிய காலம்

 சங்கம் மருவிய காலம் கி்.பி. 300 - 600 காலப்பகுதி சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாடு அயலார் ஆட்சிக்குட்பட்டது. சோழ நாட்டையும் பாண்டி நாட்டையும் களப்பிரர் கைப்பற்றி ஆட்சி செய்தனர். நடு நாடும் தொண்டை நாடும் பல்லவர் ஆட்சிக்குட்பட்டன. களப்பிரர் பாளி மொழியையும், பல்லவர் பிராகிருத மொழியையும் ஆதரித்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி, தமிழ்க் கலைகள், தமிழ்ப் பண்பாடு என்பன வளர்ச்சி குன்றின. தமிழ் மொழியில் பெருமளவிலும் சிறப்பான முறையிலும் நூல்கள் தோன்றவில்லை. எனவே, தமிழ் இலக்கிய வரலாற்றிலே இக்காலப் பகுதியினை சங்கம் மருவிய காலம் அல்லது 'இருண்ட காலம்' எனக் குறிப்பிடுவர். இருண்ட இக்காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றின. பதினெண்கீழக்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இக்காலகட்டத்தில் எழுந்தனவெனக் கூறுவர். இவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சங்க கால நூல்கள் என்று சிலர் குறிப்பிடுவர். இந்நூல்கள் பொருளாலும் நடையாலும் சங்க இலக்கியங்களினின்றும் வேறுபட்டுள்ளன. "அந்நூல்கள் எல்லாம் எவ்வாண்டில் எழுதப்பெற்றன என்பதை அறிந்து கோடற...

சங்க காலம் பொற்காலம்

 சங்க காலம் பொற்காலம் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலம் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. இதற்கு காரணம் அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், தமிழ்மொழி ஆட்சி, இலக்கியவளம், புலமைப்போற்றல், பண்பாடு நாகரிகம் என சொல்லிக் கொண்டே போகலாம். அரசியல்; இனக்குழு சமுதாயம் ஒழிந்து நிலவுடைமைச் சமுதாயமும் முடியாட்சி சமுதாயமும் தோன்றிய காலம் சங்க காலம் எனப்படுகிறது. ஊர்ப்புறங்கள் இனக்குழு நாகரிகத்தையும், நகரங்கள் நிலவுடைமை நாகரிகத்தையும் கைக்கொண்டிருந்தன. ஊர்ப்புறத்தலைவர்கள் குடைவோலை முறையிலும், அரசர்கள் வாரிசு அடிப்படையிலும் தேரந்தெடுக்கப்பட்டனர். போரும், பூசலும் மக்களை பெரிதாகப் பாதிக்கவில்லை. மக்கள் போர்க்காலத்தும் அமைதி வாழ்க்கையே வாழ்ந்தனர் என்பதும் போர் என்பது மன்னர்க்கும் மறவர்க்கும் உரியது என்பதும் அக்கால இயல்பாய் இருந்தது. ஒரு நாட்டு புலவரும் வாணிகரும் வேறு நாடு செல்வதற்கு எத்தடையும் விதிக்கப்படவில்லை. பொதுமக்களிடையே கிளர்ச்சி போன்றன நடைபெறவில்லை. மன்னன் மக்கள் மனமறிந்து செயல்பட்டான். மக்கள் கருத்துகளை அவர்கள் சார்பாகப் புலவர்கள் மன்னனிடம் எடுத்துக் கூறினர். நல்லாட்சி நடந்தது. தமிழ் வேந்த...

கிரான்குளம் விநாயகர்க்கு பாடல் - 5

 கிரான்குளம் விநாயகர்க்கு பாடல் - 5 ##############################  கணபதி கணபதி கணபதி என்று  காரியம் தொடங்குங்கள்  கற்பகநாதன் அருளது வேண்டி  கைகளைக் கூப்புங்கள்  ஆனைமுகனே கணபதியே....,.... அருள் தருவாயே ஜெயபதியே....... ஆற்றங்கரையினில் உறைபவனே....... ஆராத்தியுமக்கே குருபதியே.....  கிரான்குளப் பதியினில் அமர்ந்தே தினமும் அருள் மழை பொழிகின்றான் நம்பி வருவோர்க்கு நடன நாயகன் நல்லருள் தருகின்றான்  அவன் அருளாலே பாடுகிறோம் என்றும் எங்கள் வினைகளை போக்குகிறோம்  அவன் அருளாலே பாடுகிறோம் என்றும் எங்கள் வினைகளை போக்குகிறோம்  ஆனைமுகனே கணபதியே....,.... அருள் தருவாயே ஜெயபதியே....... ஆற்றங்கரையினில் உறைபவனே....... ஆராத்தியுமக்கே குருபதியே.....  கணபதி கணபதி கணபதி என்று  காரியம் தொடங்குங்கள்  கற்பகநாதன் அருளது வேண்டி  கைகளை கூப்புங்கள்  திருச்சியினுச்சியில் கோயில் கொண்டவன் அருள் தரும் நாயகனாம் ஈழத் திருமணி நாட்டின் இதய கோயிலில் அமர்ந்தவன் ஐங்கரனாம்  கூடியே நாங்கள் கூப்பிடுகிறோம் தினம் மனக்குறை எல்லாம் போக்குகிறோம்  கூடியே நா...

கிரான்குளம் விநாயகர்க்கு (பாடல் 9)

 கிரான்குளம் விநாயகர்க்கு (பாடல் 9) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏  கணங்களுக்கு அதிபதி ஆன எங்கள் கணபதி கரிமுக நாயகனாம் காக்கும் எங்கள் ஜெயபதி குலபதியாகி வந்தான் குளத்தூரன் குருபதி குருநாதனாகி வந்தான் எங்கள் தமிழ் உருப்படி  கிரான்குளத்தூர் பதியமர்ந்த கணபதியை பாருங்கள்  காக்கும் தெய்வமான எங்கள் குருதியை போற்றுங்கள் - 2  கிரான்குளம் பதியமர்ந்து அருள்கொடுக்கும் குகநிதி கிருபையாவும் தந்து அருளும் குவலயத்தோர் பெரும்பதி குன்று தோறும் குடியமர்ந்த குமரன் வேலன் சகநிதி ஈசனுமையின் பாலகனாய் இணைந்திருந்தான் பெருநிதி  கிரான்குளத்தூர் பதியமர்ந்த கணபதியை பாருங்கள்  காக்கும் தெய்வமான எங்கள் குருதியை போற்றுங்கள் - 2  அப்பனிவன் பிள்ளையென்ற பெயரெடுத்த உருப்படி ஆசை கொண்டு கூடுகிறோம் அவன்பதியாம் சந்நதி இலக்கிய நாயகனாம் இணையிலாத தம்பதி ஈடிணை இலாதவனாம் எம்மைக் காக்கும் குணபதி  கிரான்குளத்தூர் பதியமர்ந்த கணபதியை பாருங்கள்  காக்கும் தெய்வமான எங்கள் குருதியை போற்றுங்கள் - 2  சங்கடங்கள் தீர்த்து வைப்பான் அங்குசபதி கணபதி சாகசங்கள் செய்து வைப்பான் எங்கள் சார்பி...

கிரான்குளம் விஷ்ணு பெருமானுக்கு (பாடல்)

 கிரான்குளம் விஷ்ணு பெருமானுக்கு (பாடல்) &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&  மூவடியாலே உலகை அளந்தவன் எங்கள் மாயவனே முற்றுமுள்ளோர்க்கு முடிவுகள் தந்தவன் கோவிந்த கோபாலனே கிரான்குளம் மண்ணில் நித்தியமானவன் சர்வபாலகனே சங்கு நாதத்தால் சகலதும் செய்வான் எங்கள் ஜெயஹரியே........ எங்கள் ஜெயஹரியே  காஞ்சலோசன கோவிந்தா...... சியாம சுந்தர கேசவா........  கேசவா........... கேசவா........... கோவிந்த கோவிந்த கோபாலா  மூவடியாலே உலகை....................  ஆதிதேவனாய் அமர்ந்திருந்தேயருள் தந்திடுமட்சரனே அமிர்தென முன்பே காட்சி கொடுத்திடும் ஆனந்த சாகரனே பாலகிருஷ்ணனாய் பள்ளி கொண்டிடும் பாலன் கோபாலனே தேவகிநந்தனாய் அடியார்க்கருள்தரும் தர்மாதியட்சரனே  காஞ்சலோசன கோவிந்தா...... சியாம சுந்தர கேசவா........  கேசவா........... கேசவா........... கோவிந்த கோவிந்த கோபாலா  மூவடியாலே உலகை....................  ஞானேஸ்வரனாய் ஞானம் வழங்கும் காஞ்சலோசனனே  கிரான்க...

ஊஞ்சல் பாடல்

 எமது கிராமத்தின் மறைந்து போகும் ஊஞ்சல் பாடல் ஒரு கொத்து ஈச்சங்கொட்ட வறுத்துக் குத்தி ஒன்பது பேராச் சேந்து குத்தி கல்லும் மண்ணும் கலந்து குத்தி கல்லடி நாச்சிக்குக் களியாணம் கழுத்துப் பொறுக்கத் தாலிகட்டி என்ன தாலி அண்டம் தாலி என்ன அண்டம் சோத்தண்டம் என்ன சோறு பழம் சோறு என்ன பழம் வாழைப்பழம் என்ன வாழை குளத்து வாழை என்ன குளம் கிரான்குளம்.

சுயநலம்

 சுயநலம் #######  வெளுப்புக்கு மட்டும் வெள்ளையும் சால்வையும் புன்முறுவல் பூத்தமுகம் உள்ளுக்குள் என்னவோ மறுபடியும் அப்படித்தான்  தூசுபடியவிடா துடுக்குகளின் கொண்டாட்டம் உள்ளொன்று வைத்து புறமொன்று பேச்சு  சந்தர்ப்பம் வந்துவிட்டால் அள்ளிக் கையும் பாராது  அப்படியே அமுக்கம்  வெண்ணிற ஆடை மூர்த்தி வேறேதும் செய்யார் கோழிகள் முட்டையிட விலைக்குமவர் வாங்கி வைப்பார்கொக்கரிப்பை  அப்படியே கிடக்கிறது அட்ஷய பாத்திரம் தூசு துடைத்தபடி மீண்டும் பயணம் மக்களின் வாழ்வோ மறுபடியும் துயரம்  _________ கவிஞர் ரவிகிருஷ்ணா

வறிது

 வறிது ======  பேனாக்கள் பிரசவிக்க வார்த்தைகள் வறிதாகி காகிதங்களைத் தேடி அலைகிறது கடைசிவரை  காகித வறிதில் காட்சியும் கானமுமாய் வார்த்தைகள் வெளிக்கிளப்பும் ஓலமிட்ட ஒலியதனில் கப்பம் கட்டும் வீரனாகி காலமெல்லாம் குரல்கொடுக்கும்  மூக்கின் மேல் வரிகொடுத்து முறுக்குறும் மீசை முடி சவரக் கத்தியதன்  பிடியதற்கு வறிதுமாகி அழகான முகமதுவோ அலங்கோலக் கோணமாகி அல்லல் மிகவும்பட்டு அடிக்கடி முகமும் பார்க்கும் கண்ணாடியும் உடைப்பெடுக்கும் _________ கவிஞர் ரவிகிருஷ்ணா