கிரான்குளம் விநாயகர்க்கு (பாடல் 9)
கிரான்குளம் விநாயகர்க்கு (பாடல் 9)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கணங்களுக்கு அதிபதி ஆன எங்கள் கணபதி
கரிமுக நாயகனாம் காக்கும் எங்கள் ஜெயபதி
குலபதியாகி வந்தான் குளத்தூரன் குருபதி
குருநாதனாகி வந்தான் எங்கள் தமிழ் உருப்படி
கிரான்குளத்தூர் பதியமர்ந்த கணபதியை பாருங்கள்
காக்கும் தெய்வமான எங்கள் குருதியை போற்றுங்கள் - 2
கிரான்குளம் பதியமர்ந்து அருள்கொடுக்கும் குகநிதி
கிருபையாவும் தந்து அருளும்
குவலயத்தோர் பெரும்பதி
குன்று தோறும் குடியமர்ந்த குமரன் வேலன் சகநிதி
ஈசனுமையின் பாலகனாய் இணைந்திருந்தான் பெருநிதி
கிரான்குளத்தூர் பதியமர்ந்த கணபதியை பாருங்கள்
காக்கும் தெய்வமான எங்கள் குருதியை போற்றுங்கள் - 2
அப்பனிவன் பிள்ளையென்ற பெயரெடுத்த உருப்படி
ஆசை கொண்டு கூடுகிறோம்
அவன்பதியாம் சந்நதி
இலக்கிய நாயகனாம் இணையிலாத தம்பதி
ஈடிணை இலாதவனாம் எம்மைக் காக்கும் குணபதி
கிரான்குளத்தூர் பதியமர்ந்த கணபதியை பாருங்கள்
காக்கும் தெய்வமான எங்கள் குருதியை போற்றுங்கள் - 2
சங்கடங்கள் தீர்த்து வைப்பான் அங்குசபதி கணபதி
சாகசங்கள் செய்து வைப்பான் எங்கள் சார்பில்லாத ஜெயபதி
குங்குமத்தின் நாயகனாம் குவலயத்தோர்
வெகுமதி
கூடி நாங்கள் கூப்பிடுவோம் குறைவில்லாத குணபதி
கிரான்குளத்தூர் பதியமர்ந்த கணபதியை பாருங்கள்
காக்கும் தெய்வமான எங்கள் குருதியை போற்றுங்கள் - 2
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கவிஞர்
ரவிகிருஷ்ணா
(திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்)
கிரான்குளம் - 07
மட்டக்களப்பு
இலங்கை
Comments
Post a Comment