கிரான்குளத்தூர் நன்னாரித் தேநீர்க் கடையும்
கிரான்குளத்தூர்
நன்னாரித் தேநீர்க் கடையும்
நினைவழியா காலமும்
###################
எங்களூரிலோர் நன்னாரி தேநீர்க்கடை
பிரதான சாலையோரம்/
என்றென்றும்
காலையில் விழிக்கும்
மாலையில் உறங்கும்/
நன்னாரிச் சுவையின்
அருமையும் கூடி
சூடது பிடித்திடும்/
இளமையும் முதுமையும்
நட்புடன் கூடியே
நாலதும் பேசும்/
பக்குவம் பள்ளியாய்
நெஞ்சினில் உதித்தவை
நேரமும் பார்க்குமோ/
வாகன சாலையில்
மிஞ்சிய கதைகளோ
மீதமாய் நீட்டியும்/
பேசிய கதைகளில்
மனதிலே நின்மதி
நிறைவதாய் சேருமே/
நித்தமும் மொத்தமாய்
கையதில் ஏந்திய
குவளையும் மறக்குமோ/
தேநீர் மட்டுமா
நன்னாரி இட்டதை
நயமுடன் பகிருவார்/
இன்றும் என்றும்
நாவினில் ஒட்டியே
கதையது பேசுமே/
சுவையதன் அருமையோ
நாளெல்லாம் முடியினும்
நற்கதி செய்யுமே/
இன்றும் என்றும்
மறந்திடக் கூடுமோ
தேநீரில் மகிமையே
நினைவிலோர் சந்தமாய்/
________________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment