அனைத்து உறவுகளுக்கும் தித்திக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்
அனைத்து உறவுகளுக்கும் தித்திக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
கதிரவன் சிரிப்பில்
விடியலதுபூத்திருக்க
கார்மேகம் பொழிந்தபடி
மழையதனைத் தேக்கிவைக்க
உழவனன் சிந்தையதன்
களிப்பதனில் ஆழ்ந்திருக்க
உயிர்கள் யாவும்
பூமியிலே மகிழ்ந்திருக்க
வாசல் தெளித்துக்
கோலம் இட்டு
வண்ணமிகு மலர்களவை
சூட்டி வைத்து
புதுப்பானை ஏற்றி
அடுப்புக் கூட்டி
பொங்கலோ பொங்கல்
என குரலெழுப்பி
வெல்லப் பாகுதனில்
அரிசியது நனைய
உள்ளக் கவலை யாவும்
கரைந்து போக
மஞ்சள் குலைகளவை
மணம் பரப்பி
மாடல்லவோ செல்வம்
எனச் சிறப்பிடமாய்
உழவே உலகதனின்
அச்சாணி என்று
உணர்த்தும் உன்னதத்
திருநாள் இன்று
சாதி மதங்கள்
யாவும் கடந்து
சமத்துவம் ஓங்கிட
அன்பில் இணைந்து
புதுமையது பூக்க
பொங்கட்டும் பொங்கல்
புன்னகை சிந்தத்
ததும்பட்டும் மங்கலம்
வாழும் காலம்
வளமாகி அமையட்டும்
வாழ்த்துகள் சொல்லிச் சொல்லி
தித்திப்பு பெருகட்டும்!
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
கவிஞர் ரவிகிருஷ்ணா
கிரான் குளம்
மட்டக்களப்பு

Comments
Post a Comment